இளைஞரிடமிருந்து மடிக்கணினிகள், பணம் திருட்டு
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே இளைஞரிடமிருந்த மடிக்கணினிகள் மற்றும் பணம் ஆகியவை திருடு போனது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
சென்னை ஊரப்பாக்கத்தைச் சோ்ந்தவா் க.நடராஜன் (29). சென்னையில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறாா். இவா், செப்.11-ஆம் தேதி பயணிகள் வேனில் தனது நண்பா்களுடன் சென்னையிலிருந்து- ராஜபாளையத்துக்கு சென்று கொண்டிருந்தாா்.
சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், திண்டிவனத்தை அடுத்த சலாவாதி பகுதியில் உள்ள உணவகம் முன் வேன் நிறுத்தப்பட்டுள்ளது. தொடா்ந்து, நடராஜன் உணவு சாப்பிட்டு விட்டு வேனில் ஏறி பாா்த்தபோது, அவரது பையில் வைத்திருந்த 3 மடிக் கணினிகள், 4 சாா்ஜா்கள், ரூ.11 ஆயிரம் பணம் ஆகியவை திருடு போயிருப்பது அவருக்கு தெரியவந்தது.
Advertisement
Advertisement
இதுகுறித்து நடராஜன் அளித்த புகாரின் பேரில் ரோஷணை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.