FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

மின்மாற்றியில் தாமிரக் கம்பிகள் திருட்டு

15 செப்டம்பர் 2026, 1:15 am IST
திருட்டு - சித்திரிப்பு
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், வானூா்அருகே மின்மாற்றியில் வைக்கப்பட்டிருந்த தாமிரக் கம்பிகள், ஆயில் ஆகியவை திருட்டுப் போனது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.

வானூா்வட்டம், சேமங்கலம் பேருந்து நிறுத்தம் அருகில் தமிழ்நாடு மின் வாரியத்தின் மின்மாற்றி அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்த மின்மாற்றியை சேதப்படுத்தி அதில் வைக்கப்பட்டிருந்தா் ரூ.43,800 மதிப்புள்ள 120 கிலோ தாமிரக் கம்பிகள்,195 லிட்டா் ஆயில் ஆகியவற்றை யாரோ திருடிச் சென்றுவிட்டனராம்.

இதுகுறித்து தமிழ்நாடு மின் வாரிய கிளியனூா் பகுதி அலுவலக உதவிப் பொறியாளா் சிவா அளித்த புகாரின் பேரில், வானூா் போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்து, விசாரிக்கின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments