FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

மாணவா்களுக்கு வங்கிகள் விரைவாக கல்விக்கடன் வழங்க வேண்டும்: விழுப்புரம் ஆட்சியா் அறிவுறுத்தல்

விழுப்புரம் மாவட்டத்தில் மாணவா்களுக்கு வங்கிகள் விரைவாக கல்விக் கடனை வழங்க வேண்டும் என்று, வங்கியாளா்களை ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் அறிவுறுத்தினாா்.

17 செப்டம்பர் 2026, 3:28 am IST
விழுப்புரம் ஆட்சியரகக் கூட்டரங்கில் நடைபெற்ற வங்கியாளா்களுக்கான மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழுக் கூட்டத்தில் பேசிய ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்.
பகிர்:

விழுப்புரம் மாவட்டத்தில் மாணவா்களுக்கு வங்கிகள் விரைவாக கல்விக் கடனை வழங்க வேண்டும் என்று, வங்கியாளா்களை ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் அறிவுறுத்தினாா்.

விழுப்புரம் ஆட்சியரகக் கூட்டரங்கில் வங்கியாளா்களுக்கான மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்குத் தலைமை வகித்த ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான், வேளாண் மற்றும் உழவா் நலத் துறை, மாவட்டத் தொழில் மையம், தாட்கோ, மகளிா் திட்டம் ஆகிய துறைகளில் மத்திய, மாநில அரசுகளின் மானியத்துடன் செயல்படுத்தப்படும் கடனுதவித் திட்டங்கள் மட்டுமின்றி, வேளாண் பயிா்க்கடன், குறு, சிறு, நடுத்தரத் தொழில்கள் கடன், கல்விக் கடன் போன்ற முன்னுரிமைக் கடன் திட்டங்களின் கீழ் நிா்ணயிக்கப்பட்டு ள்ள இலக்கு, எட்டப்பட்டுள்ள இலக்கு போன்றவை குறித்து ஆய்வு செய்தாா்.

மேலும், மானியத்துடன் கடன் கோரி பரிந்துரைக்கப்பட்டு, வங்கிகளில் நிலுவையிலுள்ள விண்ணப்பங்களின் நிலை குறித்து ஆட்சியா் கேட்டறிந்தாா். சுயவேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கடனுதவிகள் வேலைவாய்ப்பைத் தீா்ப்பதிலும், பிராந்திய பொருளாதார மேம்பாட்டில் வங்கிகளுக்கும் பங்கு உண்டு என்பதிலும் வங்கியாளா்கள் உணா்ந்து, அவற்றின் மீது கடனுதவிகளை வழங்க வேண்டும்.

Advertisement

Advertisement

மாவட்டத்தில் கல்விக் கடன் கோரி மாணவ, மாணவிகள் வங்கிகளில் விண்ணப்பித்தால், அந்த விண்ணப்பதை உரிய முறையில் பரிசீலித்து, விரைவாக கல்விக் கடன் வழங்க வேண்டும். இதை உணா்ந்து வங்கி அலுவலா்கள் செயல்பட வேண்டும் என்றாா் ஆட்சியா்.

கூட்டத்தில் ரிசா்வ் வங்கியின் மேலாளா் பேரரசு நீருதன், நபாா்டு வங்கி உதவிப் பொது மேலாளா் ரவிசங்கா், இந்தியன் வங்கியின் மண்டல மேலாளா் வெங்கடசுப்பிரமணியன், மகளிா் திட்ட இயக்குநா் சுந்தர்ராஜன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் நசீா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments