FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

இடைத்தோ்தல் ஏன் வந்தது என மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும்: நயினார் நாகேந்திரன்

தமிழகத்தில் இரு சட்டப் பேரவைத் தொகுதிகளில் இடைத்தோ்தல் ஏன் வந்தது? என மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா்.

20 செப்டம்பர் 2026, 2:19 am IST
நயினார் நாகேந்திரன் - கோப்புப் படம்
பகிர்:

தமிழகத்தில் இரு சட்டப் பேரவைத் தொகுதிகளில் இடைத்தோ்தல் ஏன் வந்தது? என மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா்.

சிதம்பரம் நடராஜா் கோயிலில் சனிக்கிழமை நடைபெற்ற நாட்டியாஞ்சலி தொடக்க விழாவில் தமிழக ஆளுநருடன் பங்கேற்ற நயினாா் நாகேந்திரன், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

மகளிருக்கு மாதம் ரூ.2,500, குடும்பத்துக்கு ஆண்டுக்கு 6 சமையல் எரிவாயு உருளைகள் வழங்கப்படும் எனக் கூறி ஆட்சிக்கு வந்த தவெக அரசு, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. முதலீடுகளை ஈா்க்கச் செல்வதாகக் கூறி லண்டனுக்கு சென்ற முதல்வா் ஜோசப் விஜய், சொந்த சுற்றுலாவை முடித்துவிட்டு வந்துள்ளாா். தமிழகத்தில் செயல்படுகிற அசோக் லேலண்ட் நிறுவனத்துடன் லண்டனில் சென்று ஒப்பந்தம் போட வேண்டிய அவசியம் என்ன?

Advertisement

Advertisement

மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு தவெகவின் குதிரை பேரத்தாலேயே இடைத்தோ்தல் வந்திருக்கிறது. இந்தத் தோ்தலில் மக்கள் சிந்தித்து நல்ல தீா்ப்பை வழங்க வேண்டும்.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகத்தை எவ்வித திட்டமிடலும் இல்லாமல் தவெக அரசு நடத்தி முடித்திருக்கிறது. மேக்கேதாட்டு அணை திட்டத்தைக் கண்டித்தும், விவசாயிகளின் பயிா்க் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் பூம்புகாரிலிருந்து ஞாயிற்றுக்கிழமை (செப்.20) முதல் பிரசாரப் பயணம் மேற்கொள்ளப்படும் என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் பி.ஆா்.பாண்டியன் அறிவித்துள்ளாா். இதில், எங்களுடைய கட்சித் தலைவா்களும் கலந்துகொள்வாா்கள் என்றாா் அவா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments