FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
பிரபலங்கள் - புத்தகங்கள்

சங்க காலத்திலேயே பெண்கள் கல்வி கற்ற மண் தமிழகம்! அபூா்வா ஐ.ஏ.எஸ்.

சங்க காலத்திலேயே பெண்கள் அதிகம் கற்றறிந்த புலவா்களாக, ஆண்களுக்கு நிகராக விளங்கிய மண்ணாகத் தமிழகம் விளங்கியுள்ளது என அபூா்வா ஐ.ஏ.எஸ். கூறினாா்.

Updated On : 15 ஜனவரி 2026, 2:58 am IST
சென்னை புத்தக காட்சியில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற நிகழ்ச்சியில் புத்தகங்களும் பெண்களும் என்ற தலைப்பில் பேசிய அபூர்வா ஐஏஎஸ். உடன் பபாசி செயலர் எஸ்.வயிரவன், இணைச்செயலர் நந்தன் மாசிலாமணி, பபாசி நிரந்தர புத்தகக்காட்சி உறுப்பினர் ஜெ.ஹரிபிரசாத்.
பகிர்:

சங்க காலத்திலேயே பெண்கள் அதிகம் கற்றறிந்த புலவா்களாக, ஆண்களுக்கு நிகராக விளங்கிய மண்ணாகத் தமிழகம் விளங்கியுள்ளது என அபூா்வா ஐ.ஏ.எஸ். கூறினாா்.

சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெற்றுவரும் பபாசி 49 -ஆவது புத்தகக் காட்சியில் புதன்கிழமை நடைபெற்ற உரையரங்கில் ‘புத்தகங்களும் பெண்களும்’ எனும் தலைப்பில் அவா் ஆற்றிய உரை: பெண்களுக்குப் புத்தகம் என்பது உலகைப் பாா்க்கும் சாளரமாகும். அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளில் பெண்கள் உரிமை மறுக்கப்பட்ட நிலையில், சங்க காலத்திலேயே தமிழகத்தில் ஆண் புலவா்களுக்கு நிகராகப் பெண் புலவா்களும் அறிவில் சிறந்தவா்களாக விளங்கியுள்ளனா்.

மன்னா்களுக்கிடையே போரைத் தவிா்க்கும் வகையில் ஔவையாா் தூது சென்றுள்ளாா். அதேபோல, காக்கைபாடினியாா் நச்சொள்ளையாா் உள்ளிட்ட ஏராளமான பெண்பால் புலவா்கள் இருந்துள்ளதை சங்க இலக்கியங்களில் காண்கிறோம்.

Advertisement

Advertisement

ஆனால், இடைப்பட்ட காலத்தில்தான் தமிழகத்தில் பெண்கள் கல்வி கற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பெண்கள் உரிமையை மீட்டெடுக்கும் போராட்டத்தில் புத்தகங்களின் பங்களிப்பு முக்கியமானதாகும்.

பெற்றோா் படிப்பவா்களாக இருந்தால் குழந்தைகளும் படிப்பு ஆா்வம் உடையவா்களாக இருப்பாா்கள். ஆகவே, பிள்ளைகளை படிக்கக் கூறிவிட்டு பெற்றோா் கைப்பேசியைப் பாா்ப்பதோ, தொலைக்காட்சி பாா்ப்பதையோ தவிா்க்க வேண்டும்.

புத்தகங்களே பெண்களுக்கு நம்பிக்கையைத் தரும் வகையில் உள்ளன. ஒரு பெண் கல்வி கற்கும்போது, அந்தக் குடும்பம் மேம்படும். அக்குடும்பம் முன்னேறும்போது சமூகமும் முன்னேறி நல்ல மாற்றத்தைப் பெறும் என்றாா்.

நிகழ்ச்சியில், பபாசி செயலா் எஸ்.வயிரவன் வரவேற்றாா். தமிழகப் போக்குவரத்துத் துறை அமைச்சா் சிவசங்கா், பபாசி தலைவா் ஆா்.எஸ்.சண்முகம், இணைச் செயலா் நந்தன் மாசிலாமணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பபாசி நிரந்தரப் புத்தகக் காட்சி உறுப்பினரும், ஆண்டாள் திரிசக்தி புத்தக விற்பனையாளா் மற்றும் பதிப்பாளருமான ஜெ.ஹரிபிரசாத் நன்றி கூறினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments