ஏலத்துக்கு விடப்பட்ட ஏ.ஆர்.ரஹ்மானின் உடை: எவ்வளவு பணம் கிடைத்தது தெரியுமா?
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் உடை ஏலம் போனது தொடர்பான விவரம் கிடைத்துள்ளது.
ரஹ்மான் தற்போது சிவகார்த்திகேயனின் 'அயலான்', விக்ரமின் 'கோப்ரா', மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்', கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்துவரும் 'வெந்து தணிந்தது காடு', சிம்பு நடிக்கும் 'பத்து தல', பார்த்திபனின் 'இரவின் நிழல்' ஆகிய படங்கலுக்கு இசையமைக்கிறார்.
அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் படத்துக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவிருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ராஜஸ்தான் காஸ்மோ கிளப் நிறுவப்பட்டு 28 ஆண்டுகள் ஆனதையொட்டி சென்னை மியூசிக் அகாதமியில் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதையும் படிக்க | தனுஷ் பெயரை நீக்கி அதிர்ச்சியளித்த ஐஸ்வர்யா
Advertisement
Advertisement
இந்த விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பயன்படுத்திய உடைகள் ஏலம் விடப்பட்டன. இதில் ஏ.ஆர்.ரஹ்மான் உடுத்தியிருந்த உடை அதிகபட்சமாக ரூ. 6 லட்சத்துக்கு ஏலம் போனது. ஏலத்தில் கிடைத்த பணத்தைக் கொண்டு துணியில்லாத ஏழை மக்களுக்கு உதவிருப்பதாக கூறப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.