FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

தென்னிந்திய சினிமாவை வியக்க வைத்த ஐஸ்வர்யா லக்‌ஷ்மி! என்ன காரணம்?

நடிகை ஐஸ்வர்யா லக்‌ஷ்மி புதிய சாதனையைப் படைத்துள்ளார்.

Updated On : 13 டிசம்பர் 2022, 12:52 pm IST
பகிர்:

நடிகை ஐஸ்வர்யா லக்‌ஷ்மி புதிய சாதனையைப் படைத்துள்ளார்.

தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் பிசியாக நடித்துக்கொண்டிருக்கிறார் நடிகை ஐஸ்வர்யா லக்‌ஷ்மி. பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பூங்குழலியாக வந்து அனைவரையும் அசரடித்தவர் 2022-ல் அதிக படங்களில் நடித்த நாயகி என்கிற புதிய சாதனையை படைத்துள்ளார்.

அதாவது, இந்தாண்டில் மட்டும் இவர் நடிப்பில் தமிழில் புத்தம் புது காலை விடியாதா, கார்கி, கேப்டன், பொன்னியின் செல்வன், கட்டா குஸ்தி மலையாளத்தில் நாக்அவுட், குமாரி மற்றும் தெலுங்கில் அம்மு, கோட்சே என மொத்தம் 9 படங்கள் வெளியாகியுள்ளது. இதில் கார்கி, குமாரி  படங்களை தயாரித்துள்ளார்.

கடந்த 5 ஆண்டுகளில் எந்த ஒரு நடிகையும் ஒரே ஆண்டில் இத்தனை படங்களில் நடிக்கவில்லை என்பதால் சாதனை செய்திருக்கிறார் ஐஸ்வர்யா லக்‌ஷ்மி!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments