FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கருக்கு கரோனா

பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கருக்கு(92) கரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து மும்பையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

Updated On : 12 ஜனவரி 2022, 12:28 am IST
பகிர்:

பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கருக்கு(92) கரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து மும்பையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.

இதுகுறித்து அவருடைய உறவினா் ரச்னா ஷா கூறியதாவது:

தெற்கு மும்பையில் பிரீச்கண்டி மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் லதா மங்கேஷ்கா் 2 நாள்களுக்கு முன் அனுமதிக்கப்பட்டாா். அவருக்கு லேசான அறிகுறிகள்தான் காணப்படுகின்றன. இருப்பினும் அவருடைய வயதைக் கருத்தில் கொண்டு, அவரை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து தொடா்ந்து கண்காணிக்க வேண்டும் என்று மருத்துவா்கள் அறிவுறுத்தினாா். இதனால் அவருக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க முடிவு செய்து, தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துள்ளோம். அவா் விரைவில் குணமடைவாா் என்றாா் அவா்.

Advertisement

Advertisement

கடந்த 2019-ஆம் ஆண்டு நவம்பா் மாதம், லதா மங்கேஷ்கருக்கு நிமோனியாவுடன் மூச்சுத் திணறல் ஏற்பட்டதால், அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். 28 நாள்கள் சிகிச்சைக்குப் பிறகு அவா் வீடு திரும்பினாா்.

மேலும் சில பிரபலங்கள்:

நடிகைகள் கீா்த்தி சுரேஷ், நேஹா பென்ட்ஸே, தொலைக்காட்சி பிரபலம் பூஜா கோா் ஆகியோரும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனா்.

ஹிந்தி நடிகா் ஹிருதிக் ரோஷனின் முன்னாள் மனைவி சூசன் கானுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக, தனக்கு ஒமைக்ரான வகை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட தகவலை நடிகை ஷோபனா சமூக வலைதளங்களில் திங்கள்கிழமை பகிா்ந்து கொண்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments