FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ராஜுவிற்கு கிடைத்த பணம் இவ்வளவா ? வெளியான தகவல்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ராஜுவிற்கு கிடைத்த பணம்  தொடர்பாக தகவல் ஒன்று பரவி வருகிறது. 

Updated On : 17 ஜனவரி 2022, 11:44 am IST
பகிர்:

இந்த சீசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களிடம் பிரபலமான போட்டியாளர்கள் அதிகம் இல்லாததால் மக்களிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்கும் ஆர்வம் குறைவாகவே இருந்தது. ஆனால் சில வாரங்களில் பார்வையாளர்களின் ஆர்வத்தை பிக்பாஸ் நிகழ்ச்சி ஈர்த்தது. 

குறிப்பாக பாவனி, அபிநய், அமீர் போன்றோர் சமூக வலைதளங்களில் அதிகம் பேசுபொருளாக இருந்தனர். மேலும் மக்களின் ஆதரவை ராஜு துவக்கத்தில் இருந்தே பெற்றார். மற்ற போட்டியாளர்கள் அவர் அளவுக்கு பெரிதாக சோபிக்கவில்லை. 

இதனால் அனைவரும் கணித்தபடியே ராஜுவே பிக்பாஸ் டைட்டிலை கைப்பற்றினார். இந்த நிலையில் பிக்பாஸ் டைட்டிலை வென்ற ராஜுவிற்கு ரூ.50லட்சம் கிடைத்துள்ளது.

மேலும் 16 வாரங்கள் பிக்பாஸ் வீட்டில் இருந்ததற்கு ஊதியமாக ரூ.21 லட்சம் ராஜுவிற்கு கிடைத்துள்ளது. ஆக மொத்தம் ரூ.71 லட்சத்துடன் பிக்பாஸ் வீட்டில் இருந்து ராஜு வெளியேறியிருக்கிறார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments