பொன்னியின் செல்வன் புதிய சாதனை
பொன்னியின் செல்வன் திரைப்படம் புதிய சாதனையைப் படைத்துள்ளது.
பொன்னியின் செல்வன் திரைப்படம் புதிய சாதனையைப் படைத்துள்ளது.
கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி உலகெங்கிலும் வெளியான இயக்குநர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் இதுவரை ரூ.450 கோடி அதிகமாக வசூலித்துள்ளதாகவும் வெளிநாடுகளில் மட்டும் இந்தப் படம் ரூ.130 கோடி அளவுக்கு வசூலித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தில் மட்டும் பொன்னியின் செல்வன் திரைப்படம் ரூ.200 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாம். மேலும், பொன்னியின் செல்வன் படம் அதிக வசூலித்த தமிழ் படங்களின் வரிசையில் முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளது.
Advertisement
இதையும் படிக்க | நடிகர் கார்த்திக்குடன் நடனமாடும் சன்னி லியோன்!
இரண்டாவது இடத்தில் கமல்ஹாசனின் விக்ரம், 3வது இடத்தில் பாகுபலி 2, 4வது இடத்தில் நடிகர் அஜித்தின் விஸ்வாசம், 5வது இடத்தில் விஜய்யின் பீஸ்ட் திரைப்படமும் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இலங்கையில் வெளியான தமிழ்ப் படங்களில் அதிக வசூலைப் பெற்ற திரைப்படமாக என்கிற புதிய சாதனையை பொன்னியின் செல்வன் பெற்றுள்ளது.