முகப்பு
செய்திகள்

கண்ணகி படத்தில் மேக்கப் போடாமல் நடித்துள்ளேன்: கீர்த்தி பாண்டியன்

நடிகை கீர்த்தி பாண்டியன் கண்ணகி படத்தில் தான் மேக்கப் போடாமல் நடித்துள்ளதாக கூறியுள்ளார். 

Updated On : 12 டிசம்பர், 2023 at 5:43 PM
பகிர்:
Updated On : 6 பிப்ரவரி, 2024 at 6:55 PM

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக அறியப்படுவர் அசோக் செல்வன். இவர் நடிகர் அருண் பாண்டியனின் மூன்றாவது மகளான நடிகை கீர்த்தி பாண்டியனை சமீபத்தில் திருமணம் செய்துகொண்டார். இருவரும் இணைந்து ப்ளூ ஸ்டார் படத்தில் நடித்து உள்ளனர். 

2019இல் தும்பா படத்தின் மூலம் அறிமுகமான நடிகை கீர்த்தி பாண்டியன் மலையாளத்தில் வரவேற்பு பெற்ற ஹெலன் படத்தினை தமிழில் ‘அன்பிற்கினியாழ்’ என ரீமேக் செய்தார். நாடகத்திலும் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.

நடிகைகள் அம்மு அபிராமி, வித்யா பிரதீப், ஷாலினி ஜோயா, கீர்த்தி பாண்டியன் ஆகிய நான்கு நாயகிகளின் கதையை மையமாக வைத்து கண்ணகி படம் உருவாகியுள்ளது. இதில் கீர்த்தி பாண்டியனின் போஸ்டர்கள் இணையத்தில் வைரலாகின. 

நேர்காணலில் நடிகை கீர்த்தி பாண்டியன், “இந்தப் படத்தில் நான் மேக்கப் போடாமல் நடித்துள்ளேன். இந்த கதாபாத்திரத்துக்கு தேவைப்பட்டது. அதனால் இயக்குநரும் அதைதான் கேட்டார். எனது முகத்தினை மேக்கப் இல்லாமல் அனைத்து வகையான குறைகளுடனும் திரையில் காட்டியிருக்கிறேன். இது எனக்கு மகிழ்ச்சியே. 

இந்தப் படத்தில் எனது கதாபாத்திர பெரிதாக வசனங்கள் பேசாது. மௌனம் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்” எனக் கூறியுள்ளார். 

யு/ஏ தணிக்கைச் சான்றிதழ் பெற்றுள்ள கண்ணகி திரைப்படம் டிச.15ஆம் தேதி வெளியாக உள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.