முதல்வர் ரேவந்த் ரெட்டி, அல்லு அர்ஜுன். 
செய்திகள்

அல்லு அர்ஜுனுக்கு கை, கால், கிட்னி போய்விட்டதா?: ரேவந்த் ரெட்டி கடும் தாக்கு!

அல்லு அர்ஜுனை கடுமையாக சாடியுள்ளார் ரேவந்த் ரெட்டி...

DIN

நடிகர் அல்லு அர்ஜுனை கடுமையாகத் தாக்கிப் பேசியுள்ளார் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி.

நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான புஷ்பா - 2 திரைப்படம் ரூ. 1500 கோடிக்கும் மேல் வசூலித்து ரசிகர்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால், படத்தின் சிறப்பு திரையிடலின்போது திரையரங்குக்கு திடீரென வந்த அல்லு அர்ஜுனால் ஏற்பட்ட நெரிசலில் ரேவதி என்கிற பெண் உயிரிழந்தார்.

முறையான, அறிவிப்பு இல்லாமல் அல்லு அர்ஜுன் சென்றதால்தான் நெரிசல் ஏற்பட்டது என காவல்துறை வழக்குப்பதிவு செய்து அல்லு அர்ஜுனை கைது செய்தனர். ஆனால், கைதான 12 மணி நேரத்திலேயே சிறையிலிருந்து பிணையில் வெளியே வந்தார்.

வெளியே வந்தவரைக் காண தெலுங்கு சினிமா பிரபலங்கள் பலரும் அல்லு அர்ஜுன் வீட்டிற்குச் சென்று தங்களின் ஆதரவைத் தெரிவித்தனர். இது பெரிய சர்ச்சையைக் கிளப்பியது. ஒரு மரணத்தை வைத்து புஷ்பா - 2 படத்தை மார்க்கெட்டிங் செய்கிறார்கள் என பலரும் கருத்து தெரிவித்தனர்.

இந்த நிலையில், தெலங்கானா மாநில முதல்வர் ரெட்டி சட்டப்பேரவையில் இச்சம்பவம் குறித்து பேசினார். அதில், “நடிகர் அல்லு அர்ஜுன் சில மணிநேரங்கள் சிறையில் இருந்தார். அவரைக் காண தெலுங்கு திரையுலகமே சென்றிருக்கிறது. அவருக்கு கை, கால், கிட்னி ஏதாவது போய்விட்டதா? எதற்காக இந்த ஆதரவுகள்? நெரிசலில் சிக்கி பலியான பெண்ணைக் குறித்தோ அவரது மகனைக் குறித்தோ இவர்கள் கவலைப்பட்டார்களா? இந்த ஆதரவு மூலம் தெலுங்கு சினிமா திரையுலகம் சமூகத்திற்கு என்ன சொல்ல வருகிறது? அல்லு அர்ஜுன் என்ன மாதிரியான மனிதர்?” என கடுமையாகத் தாக்கி பேசியிருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அசோக் லேலண்ட் விற்பனை 5% உயா்வு

பாதுகாப்புப் படையுடன் மோதல்: இரு பெண் நக்ஸல்கள் சுட்டுக்கொலை

பள்ளிகளில் மழைநீா் தேங்கக் கூடாது: தலைமை ஆசிரியா்களுக்கு உத்தரவு

விஸ்வகா்மா ஜெயந்தி: பிரதமா் மோடி வாழ்த்து

செங்கோட்டை சிறப்பு ரயிலுக்கு கூடுதல் நிறுத்தங்கள்

SCROLL FOR NEXT