செய்திகள்

’கேவலமான மனிதர்கள்..’ கூவத்தூர் குற்றச்சாட்டுக்கு த்ரிஷா பதிலடி!

DIN

நடிகை த்ரிஷா 96 படத்தின் வெற்றிக்குப் பிறகு பல படங்களில் நடித்து வருகிறார். இறுதியாக, இவர் நடித்து வெளியான பொன்னியின் செல்வன், ரோட், லியோ ஆகிய படங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் தற்போது விடாமுயற்சி படப்பிடிப்பில் இருக்கிறார்.

இந்நிலையில், அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட சேலம் மாவட்ட நிர்வாகி ஏவி ராஜு பேட்டி ஒன்றை அளித்திருந்தார்.

அதில், ஜெயலலிதா மறைவுக்குப் பின் சசிகலாவின் ஆதரவாளராக இருந்த ஓ.பன்னீர்செல்வம் கட்சியிலிருந்து வெளியேறியதும், ஆட்சியைக் காப்பாற்ற தன் ஆதரவு எம்எல்ஏக்களை சசிகலா 10 நாள்கள் கூவத்தூரில் உள்ள பிரபல ரிசார்ட்டில் தங்க வைத்தார்.

அதைக் குறிப்பிட்டு பேசிய ராஜு, “கூவத்தூரில் எத்தனை நடிகைகளைக் கூட்டி வந்தார்கள் தெரியுமா? அதில் எம்எல்ஏ வெங்கடாசலம் நடிகை திரிஷாதான் வேண்டும் என அடம்பிடித்தார். அதனால், நடிகர் கருணாஸ் ரூ.25 லட்சம் கொடுத்து த்ரிஷாவை கூவத்தூருக்கு அழைத்து வந்தார். இன்னும் நிறைய நடிகைகள் வந்தார்கள்.” எனக் கூறினார்.

இந்தக் குற்றச்சாட்டு த்ரிஷா ரசிகர்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால், எக்ஸ் தளத்தில் த்ரிஷாவுக்கு ஆதரவாகவும் எதிராகவும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வந்தன.

இந்த நிலையில், நடிகை த்ரிஷா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளார். அதில், “ கவனத்தை ஈர்ப்பதற்காக எந்த நிலைக்கும் செல்லக்கூடிய கேவலமான மனிதர்களைத் திரும்ப திரும்ப பார்ப்பது அருவருப்பாக இருக்கிறது. இதற்காக, கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இனி செய்ய வேண்டியதையும் சொல்ல வேண்டியதையும் என் சட்டப்பிரிவினர் பார்த்துக்கொள்வார்கள்.” எனக் கூறியுள்ளார்.

முன்னதாக, தன்னைக் குறித்து ஆபாச கருத்து தெரிவித்த நடிகர் மன்சூர் அலிகான் மீது த்ரிஷா காவல்துறையில் புகார் அளித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வசீகரம்!

காஸா போர்: ஐ.நா.வில் சேவையாற்றிய ஓய்வுபெற்ற இந்திய ராணுவ அதிகாரி பலி

வெள்ளை மாளிகையில் ஒலித்த 'சாரே ஜஹான் சே அச்சா'!

கீழ்வேளூரில் 6-ஆவது நாளாக மழை

வேட்டையன் - ரஜினிக்கான படப்பிடிப்பு நிறைவு!

SCROLL FOR NEXT