வெற்றிமாறன் அமைத்த பாதையில் செல்கிறேன்: சூரி
நடிகர் சூரி, கருடன் டிரைலர் வெளியீட்டு விழாவில் தன் கதாநாயக அனுபவம் குறித்து பேசியுள்ளார்.
நடிகர் சூரி விடுதலை படத்தைத் தொடர்ந்து சில படங்களில் நாயகனாக நடித்து வருகிறார். அந்த வகையில் சூரி நடிப்பில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் படம்தான் கருடன்.
இந்தப் படத்தில் மலையாள நடிகர் உன்னி முகுந்தன் வில்லனாகவும் சசிகுமார், சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர்.
படத்துக்கான கதையை பிரபல இயக்குநர் வெற்றிமாறன் எழுத துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார். ஆக்சன் பாணியில் உருவாகியுள்ள இப்படம் மே 31 ஆம் தேதி வெளியாகுமென இன்று தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Advertisement
Advertisement
இன்று, இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடம் கவனம் பெற்று வருகிறது.
இந்த நிலையில், டிரைலர் வெளியீட்டு விழாவில் நடிகர் சூரி, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, சசிகுமார் இயக்குநர் வெற்றிமாறன் உள்ளிட்டோர் பங்குபெற்றனர்.
அப்போது, பேசிய நடிகர் சூரி, “விடுதலை திரைப்படத்திற்குப் பின் கதைநாயகனாக நடிப்பதில் ஒரு பயம் இருந்தது. சரியாக இருக்குமா என்கிற பதற்றத்துடன்தான் இருந்தேன். எதுவும் தவறாகி விடக்கூடாது என்பதற்காக இயக்குநர் துரை செந்தில் குமார் படத்தில் நடிக்க விரும்பினேன். மற்ற நகைச்சுவை நடிகர்களைப்போல் பல படங்களில் அடுத்தடுத்து நாயகனாக நடித்திருந்தால், நான் வெற்றிமாறன் அண்ணனுக்கு புதிதாக தெரிந்திருக்க மாட்டேன் என நினைக்கிறேன். என் வாழ்க்கை விடுதலைக்கு முன், விடுதலைக்குப் பின் என ஆகிவிட்டது. எனக்குக் கிடைக்கும் விசில் சத்தங்கள் எல்லாம் அவருக்குதான் சொந்தம். விடுதலையின் அனுபவம்தான் கருடனுக்கு உதவியது. என்றும் இதை நான் மறக்க மாட்டேன்” என நெகிழ்ச்சியாக பேசினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.