மலையாள நடிகர் திலீப் நாயகனாக நடித்து வெளியான “பா பா பா” எனும் புதிய திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகள் சர்ச்சையை உருவாக்கியுள்ளன.
2017 ஆம் ஆண்டு முன்னணி நடிகையை காரில் கடத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், 8 ஆவது குற்றவாளியாகச் சேர்க்கப்பட்ட பிரபல மலையாள நடிகர் திலீப்பை போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி கேரள நீதிமன்றம் கடந்த டிச.8 ஆம் தேதி விடுதலை செய்தது.
நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்புக்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், நடிகர் திலீப் நாயகனாக நடித்துள்ள “பா பா பா” எனும் புதிய திரைப்படம் கடந்த வியாழக்கிழமை (டிச. 18) திரையரங்குகளில் வெளியானது.
அறிமுக இயக்குநர் தனஞ்சய் சங்கர் இயக்கத்தில் உருவான இப்படத்தில், நடிகர்கள் மோகன் லால், வினீத் ஸ்ரீனிவாசன், தயான் ஸ்ரீனிவாசன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இந்தப் படத்தில், ரேடார் எனும் கதாபாத்திரத்தில் வரும் நடிகர் திலீப் கடத்தல்காரராக நடித்துள்ளார். இதில், ஒரு குறிப்பிட்ட காட்சியில் தொழில்ரீதியான கடத்தல்காரர் (ப்ரொஃபெஷனல் கிட்ணாப்பர்) என நடிகர் திலீப் புகழப்படுவது பல்வேறு தரப்பினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்த காட்சிகளில், ரமணி எனும் ஒரு கதாபாத்திரத்தை நடிகர் திலீப் கடத்த முற்படுகிறார். காட்சியில் ஒரு பெண் காட்டப்படுகிறார். அப்போது, கடத்தல் மற்றும் பாலின ரீதியான இரட்டை அர்த்தத்துடன் ஒரு வசனம் இடம்பெறுகிறது. பின்னர், ரமணி என்பது ஒரு பசு எனத் தெரியவருகின்றது.
இந்தக் காட்சி, நடிகர் திலீப்பின் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கை நினைவுப்படுத்துவதாகவும், படத்தின் எழுத்தாளராக பெண் ஒருவர் பணியாற்றிய போதிலும் இத்தகைய வசனங்கள் இருப்பது வருத்தமளிப்பதாகவும் ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இத்துடன், “பா பா பா” திரைப்படத்துக்கு ஃபஹிம் சஃபர் மற்றும் நடிகை நூரின் ஷரீஃப் ஆகியோர் திரைக்கதை எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: 2025: ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டம் முதல் கரூர் வரை... நெஞ்சை உலுக்கிய நெரிசல் பலிகள்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.