ஜன நாயகன் - கேரளத்தில் அதிகாலைக் காட்சி இல்லை!
ஜன நாயகன் அதிகாலைக் காட்சி குறித்து...
கேரளத்தில் ஜன நாயகன் திரைப்படத்திற்கான அதிகாலைக் காட்சிகள் இல்லையென அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் விஜய்யின் ஜன நாயகன் திரைப்படம் ஜன. 9 அன்று பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. கேவிஎன் புரடக்ஷன்ஸ் நிறுவனத் தயாரிப்பில் அதிக பட்ஜெட்டில் உருவான இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் கோலாகலமாக நடைபெற்றது.
நிகழ்வில், விஜய் பேசிய பேச்சு ரசிகர்களிடம் உருக்கத்தை ஏற்படுத்தியுடன் விழா நிகழ்வுகள் பலருக்கும் நெகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.
Advertisement
Advertisement
பெங்களூருவில் இப்படத்தின் முதல்நாள் முதல் காட்சிக்கான டிக்கெட் முன்பதிவுகள் ஆன்லைன் வாயிலாக துவங்கியுள்ளன.
இந்த நிலையில், எப்போதும் கேரளத்தில் முதல்காட்சி அதிகாலை 4 மணிக்குத் துவங்கும். ஆனால், இம்முறை தயாரிப்பு தரப்பிலிருந்து அதற்கு ஒப்புதல் அளிக்காததால் முதல் நாளின் முதல் காட்சி காலை 6 மணிக்கே துவங்கும் என இப்படத்தின் கேளர விநியோகிஸ்தர் அறிவித்துள்ளார்.
கேரளம் மட்டுமல்லாமல் கர்நாடகம், ஆந்திரத்திலும் முதல் காட்சி காலை 6 மணிக்கே ஆரம்பமாகிறது.