டிராகன் திரைகள் அதிகரிப்பு!
டிராகன் படத்திற்கு கூடுதல் திரைகள்...
பிரதீப் ரங்கநாதனின் டிராகன் திரைப்படத்திற்கான காட்சிகள் அதிகரித்துள்ளன.
இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த டிராகன் திரைப்படம் நேற்று (பிப். 21) திரையரங்குகளில் வெளியானது.
கல்லூரியில் படிப்பில் கவனம் செலுத்தாத மாணவன் டிராகன் (பிரதீப் ரங்கநாதன்) தொழில் வாழ்க்கைக்காக என்னென்ன வேலைகள் செய்கிறார் என்பதை சுவாரஸ்யமான முறையில் காட்சிப்படுத்தியதற்காக இப்படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
Advertisement
இதையும் படிக்க: நேர்மையாக இருப்பவர்களுக்கு ஆப்ஷன் பி வேண்டும்: டாப்ஸி
இதனால், இப்படம் பெரிய வணிக வெற்றியைப் பெரும் என்றே தெரிகிறது. இந்த நிலையில், சென்னை உள்பட பல பகுதிகளில் டிராகன் படத்திற்கான திரைகள் மற்றும் காட்சிகள் அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.