செய்திகள்

அதிக விலைக்கு விற்கப்பட்ட ஜன நாயகன் வெளிநாட்டு உரிமம்?

ஜன நாயகன் வெளிநாட்டு உரிமம் குறித்து...

DIN

ஜன நாயகன் திரைப்படத்தின் வெளிநாட்டு உரிமம் மிகப்பெரிய விலைக்கு விற்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகும் 69-வது படத்தினை எச். வினோத் இயக்குகிறார். இதுதான் விஜய்யின் கடைசி படம் என அறிவித்துள்ளதால் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இப்படம் உருவாகி வருகிறது.

ஜன நாயகன் எனப் பெயரிடப்பட்ட இப்படத்தில் நடிகர்கள் பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, கௌதம் வாசுதேவ மேனன், நரேன், பிரியாமணி, பிரகாஷ் ராஜ் ஆகியோர் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார்.

இதுவரை, இரண்டு போஸ்டர்களை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. இரண்டும் ரசிகர்களைப் பெரிதாகக் கவரவில்லை என்றாலும் இப்படம் அரசியலை மையமாக வைத்து உருவாகிறது என்கிற ஊகத்தை அளித்துள்ளது.

முக்கியமாக, விஜய் சாட்டையை சுழற்றும் இரண்டாவது போஸ்டரின் வண்ணம், ‘நான் ஆணைவிட்டால்’ வாசகம் குறிப்பிட்ட அரசியல் கட்சியைத் தாக்குவதுபோன்றே இருக்கிறது.

இந்த நிலையில், ஜன நாயகன் படத்தின் வெளிநாட்டு வெளியீட்டு உரிமத்தை பிரபல நிறுவனம் ரூ. 75 கோடிக்குக் கைப்பற்றியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது, உண்மையென்றால் நடிகர் விஜய் நடித்த படங்களிலேயே இதுவே ஓவர்சீஸ் உரிமத்திற்கு அதிக தொகைக்கு விற்கப்பட்ட படமாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோழீஸ்வரா் கோயில் குடமுழுக்கு: திரளானோா் தரிசனம்

தனுசுக்கு மன மகிழ்ச்சி: தினப்பலன்கள்!

வீட்டின் தடுப்புச் சுவா் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழப்பு

தேசிய குருதிக் கொடையாளா் தின விழா

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி: இன்று முதல் கணக்கெடுப்புப் படிவம் விநியோகம்

SCROLL FOR NEXT