தாய்லாந்தில் பிறந்த நாளைக் கொண்டாடிய ஷ்ருதி ஹாசன்!
ஷ்ருதி ஹாசன் பிறந்த நாள் கொண்டாட்டம்...
நடிகை ஷ்ருதி ஹாசன் தன் பிறந்த நாளை தாய்லாந்தில் கொண்டாடியுள்ளார்.
தமிழ், தெலுங்கில் முன்னணியாக நடிகையாக இருப்பவர் ஷ்ருதி ஹாசன். இறுதியாக இவர் நடித்த சலார் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமானது.
தற்போது, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற்று வருகிறது.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: மிஷ்கின் பேச்சில் தவறு இல்லை: சமுத்திரக்கனி
இந்த நிலையில், தன் 39-வது பிறந்த நாளை தாய்லாந்தில் தன் நண்பர்களுடன் கொண்டாடியுள்ளார். '2025 மாயாஜாலமான ஆண்டு. ஜனவரி மாதக் குழந்தையாக மகிழ்ச்சியாக இந்த ஆண்டை தொடங்குகிறேன்’ என கொண்டாட்டப் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.