காதல் தோல்வி, தொடர் ரூ. 100 கோடி... உண்மையைச் சொன்ன பிரதீப் ரங்கநாதன்!
மனம் திறந்த பிரதீப் ரங்கநாதன்...
நடிகர் பிரதீப் ரங்கநாதன் தன்னுடைய காதல் தோல்வி குறித்து பேசியுள்ளார்.
லவ் டுடே மூலம் தமிழ் சினிமாவின் திறமையான இயக்குநர் நடிகராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். அப்படம் ரூ. 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.
இது ஏதோ அதிர்ஷ்டத்தில் அமைந்துவிட்டது என இதற்கான பேச்சுகளும் இருந்தன. ஆனால், அடுத்தடுத்து பிரதீப் நடித்த டிராகன் ரூ. 150 கோடியையும் டியூட் ரூ. 130 கோடியும் வசூலித்து நட்சத்திர நடிகர் என்கிற அடையாளம் பிரதீப்புக்கு கிடைத்தது.
Advertisement
தமிழ் மட்டுமல்லாது தெலுங்கிலும் ஏகப்பட்ட ரசிகர்களை வைத்திருப்பதால் அதற்கான வணிகமும் விரிவடைந்துள்ளது. தற்போது, இவர் நடித்த எல்ஐகே திரைப்படம் வருகிற ஏப். 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்த நிலையில், நேர்காணலில் பேசிய பிரதீப் ரங்கநாதன், “எல்ஐகே திரைப்படம் ரூ. 100 கோடி வசூலித்தால் மகிழ்ச்சியடைவேன். ஆனால், இது அழுத்தத்தையும் தருகிறது. பலரும் என்னுடைய குறைந்தபட்ச வசூல் ரூ. 100 கோடி என்றே நினைக்கின்றனர். இதனால், என் படம் ரூ. 100 கோடியை வசூலிக்கவில்லை என்றால் அப்படம் வெற்றியடையவில்லை என்றே எடுத்துக்கொள்வார்கள். வசூலைவிட என் படங்களை விரும்புவதுதான் எனக்கு மகிழ்ச்சியைத் தரும்.” என்றார்.
மேலும், ”தற்போது காதலில் இருக்கிறீர்களா? இல்லையா?” எனக் கேட்கப்பட்டது. அதற்கு பிரதீப், “நான் சிங்கிள். இருந்தாலும், எனக்கு நிறைய காதல் தோல்விகள் இருந்திருக்கின்றன. நான் யாரையும் பிளாக் செய்ய மாட்டேன். ஆனால், பலர் என்னை பிளாக் செய்திருக்கிறார்கள்.” எனத் தெரிவித்தார்.