கெளரி தொடரில் ரோஜா தொடர் நடிகை!
கெளரி தொடரில் ரோஜா தொடர் நடிகை நடிக்கவுள்ளது குறித்து...
கெளரி தொடரில் ரோஜா தொடர் நாயகி பிரியங்கா நல்காரி புதிய பாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முன்னணி தொடர்களில் ஒன்றான கெளரி தொடரில், கெளரியாக சம்யுக்தாவும் நரேஷ் ஈஸ்வர் அசோக் பாத்திரத்திலும் நடித்து வருகின்றனர்.
பத்மாவதி திரைக்கதை எழுத, பரமேஷ்வர் இத்தொடரை இயக்குகிறார். திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் இத்தொடரை, இல்லத்தரசிகள் மட்டுமின்றி இளைய தலைமுறையினரும் விரும்பிப் பார்க்கின்றனர்.
Advertisement
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் பிரபலம் நடிகை சுஜிதா, கருமாரி அம்மனாக சிறப்புத் தோற்றத்தில் இந்தத் தொடரில் நடிக்கிறார்.
இந்த நிலையில், கெளரி தொடரில் ரோஜா தொடர் நாயகி பிரியங்கா நல்காரி நடிக்கவுள்ளார். இவர் மங்கா என்ற புதிய பாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
விறுவிறுப்பாக சென்றுக்கொண்டிருக்கும் கெளரி தொடர், பிரியங்கா நல்காரியின் வருகையால், இந்தத் தொடரின் சுவாரசியம் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
யார் இந்த பிரியங்கா நல்காரி?
தமிழில் தீயா வேலை செய்யனும் குமாரு மற்றும் காஞ்சனா 3 போன்ற படங்களில் நடித்துப் பிரபலமானவர் பிரியங்கா நல்காரி.
இவர், மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்ற ரோஜா தொடரில் நாயகியாக நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர். இதனைத் தொடர்ந்து, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீதா ராமன், நளதயமந்தி ஆகிய தொடர்களில் நடித்திருந்தார்,
பின்னர், நடிகர் ஜிஷ்ணு மேனனுடன் ரோஜா - 2 தொடரில் நடிகை பிரியங்கா நல்காரி நடித்திருந்தார். ரோஜா தொடர் இரண்டாம் பாகத்துக்குப் பிறகு தொடர்களில் நடிக்காமல் இருந்த பிரியங்கா, மீண்டும் சின்ன திரையில் தனது பயணத்தை கெளரி தொடர் மூலம் தொடங்கவுள்ளார்.