முகப்பு
செய்திகள்

காசி சாமியார்களில் பலர் கொலைக் குற்றவாளிகள்: ஆர்யா

நடிகர் ஆர்யா காசியிலுள்ள சாமியார்கள் குறித்து பேசியுள்ளார்...

Updated On : 14 ஏப்ரல், 2026 at 12:37 PM
ஆர்யா - x
பகிர்:
Updated On : 14 ஏப்ரல், 2026 at 11:09 AM

நடிகர் ஆர்யா காசியில் சாமியார்களாக உள்ள பலர் குற்றவாளிகள் எனக் கூறியுள்ளார்.

நடிகர் ஆர்யா நடிப்பில் உருவான மிஸ்டர் எக்ஸ் திரைப்படம் ஏப். 17 வெளியீடாகத் திரைக்கு வருகிறது. நீண்ட காலமாக வெளியாகாமல் இருந்த இப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதால் படக்குழுவினர் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

இதற்கான நேர்காணலில் பேசிய நடிகர் ஆர்யா, “நான் கடவுள் திரைப்படத்திற்காக காசியில் இருந்தபோது அங்குள்ள சாமியார்களுடன் பழக நேர்ந்தது. அப்போதுதான் தெரிந்தது, அங்கு சாமியாராக இருப்பவர்களில் 40 சதவீதம் பேர் கொலைக் குற்றங்களைச் செய்து தலைமறைவாக வாழ்ந்து வருகின்றனர். படப்பிடிப்பின் போது காவலர்கள், எங்களிடமே சாதாரண துப்பாக்கிதான் இருக்கிறது. உள்ளே சில சாமியார்கள் ஏகே - 47 வைத்திருப்பார்கள் கவனமாக இருங்கள் என்றனர்.” எனக் கூறியுள்ளார்.

Advertisement

இது இந்தியளவில் சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. சிலர் ஆர்யா இஸ்லாமியர் என்பதால் இப்படிச் சொல்கிறார் என்றும் இன்னும் சிலர் ஆர்யா சொல்வது உண்மைதான் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

பாலா இயக்கத்தில் உருவான நான் கடவுள் திரைப்படம் தேசிய விருது வென்றது குறிப்பிடத்தக்கது.

summary

Actor Arya has stated that many of those posing as godmen in Kasi are criminals.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.