புரி ஜெகன்நாத்தை வாழ்த்திய விஜய் சேதுபதி!
புரி ஜெகன்நாத் குறித்து விஜய் சேதுபதி....
நடிகர் விஜய் சேதுபதி இயக்குநர் புரி ஜெகன்நாத்தை வாழ்த்தியுள்ளார்.
தெலுங்கு திரைப்படத் துறையில் தனித்துவமான இயக்குநர் எனப் பெயரெடுத்தவர் புரி ஜெகன்நாத். ஆக்சன் திரைப்படங்களை இயக்கி பெரிய வெற்றியைப் பெற்றவர். இதுவரை 35-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கத்தில் உருவான அப்பு (கன்னடம்), போக்கிரி, பிஸ்னஸ்மேன் (தெலுங்கு) ஆகிய திரைப்படங்கள் பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றதுடன் வசூலிலும் அசத்தின. போக்கிரி தமிழிலும் ரீமேக் செய்யப்பட்டது.
இறுதியாக நடிகர் விஜய் தேவரகொண்டாவை வைத்து லைகர் என்கிற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இப்படம் தோல்விப்படமானது. தற்போது, நடிகர் விஜய் சேதுபதியை நாயகனாக வைத்து ஸ்லம்டாக் என்கிற படத்தை இயக்கி வருகிறார்.
Advertisement
இந்த நிலையில், சினிமாவில் புரி ஜெகன்நாத் 26 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதற்காக பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் விஜய் சேதுபதியும் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”என்ன ஒரு பயணம்! சினிமாவில் 26 ஆண்டு காலம் என்பது வெறும் மைல்கல் அல்ல. இது தையரியமும், பயமற்ற குரலாலும் கட்டமைக்கப்பட்ட சாம்ராஜ்யம். அன்பிற்கினிய புரி சார், உங்களுடன் ஸ்லம்டாக் படத்தில் பணிபுரிவது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. நடிகர்களான நாங்கள் எங்களை நம்பும் இயக்குநர்களை நோக்கியே இருக்கிறோம். நீங்கள் அதனைத் தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறீர்கள். இந்தத் திரைப்படம் இதனைச் சார்ந்த அனைவருக்கும் நினைவுகூறும்படியானதாக இருக்கும் என நம்புகிறேன். தொடர்ந்து உங்கள் கதைகள் வெல்ல வாழ்த்துகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.