நீண்ட நாள் கனவு... தாய்லாந்து சுற்றுலா சென்ற பாக்கியலட்சுமி நடிகைகள்!
பாக்கியலட்சுமி நடிகைகள் திவ்யா கணேசன், நேஹா, அக்ஷிதா உள்ளிட்டோர் தாய்லாந்துக்கு சென்றுள்ளது குறித்து...
பாக்கியலட்சுமி தொடரில் நடித்த நடிகைகளான திவ்யா கணேசன் உள்ளிட்டோர் தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.
கோடை காலத்தையொட்டி தாய்லாந்து சென்றுள்ள நடிகைகள், அங்கு எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தங்களின் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.
விஜய் தொலைக்காட்சியில் 2020 முதல் 2025 வரை தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கும் மேலாக பாக்கியலட்சுமி தொடர் ஒளிபரப்பாகி வந்தது. விஜய் தொலைக்காட்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்குப் பிறகு அதிக நாள்கள் ஒளிபரப்பான தொடர் என்ற பெருமையை பாக்கியலட்சுமி பெற்றுள்ளது.
Advertisement
இத்தொடரின் பாத்திரங்கள் நிஜ வாழ்க்கையில் உள்ள பாத்திரங்களை பிரதிபலிக்கும் வகையில் இருந்ததால், பலதரப்பட்ட மக்களால் விரும்பி பார்க்கப்பட்ட தொடராக பாக்கியலட்சுமி இருந்தது.
இத்தொடரில் நடித்த திவ்யா கணேசன் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குச் சென்று வெற்றியாளராகவும் மாறி பலரைக் கவர்ந்தார். இந்நிலையில், இத்தொடரில் முக்கிய பாத்திரங்களில் நடித்த நடிகை திவ்யா கணேசன், நேஹா மற்றும் அக்ஷிதா அசோக் தாய்லாந்துக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.
கோடை விடுமுறையை உற்சாகமாகக் கழிக்கும் வகையில் அவர்கள் தாய்லாந்துக்குச் சென்றுள்ளனர். இதன் மூலம் தாய்லாந்து செல்ல வேண்டும் என்ற திவ்யாவின் கனவும் நனவாகியுள்ளது.
அங்கு மூவரும் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், விடியோக்களை நடிகை திவ்யா கணேசன் சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். பிக் பாஸ் திவாகரின் தொல்லை தாங்காமல் தாய்லாந்துக்கு திவ்யா சென்றுவிட்டதாகவும், பெண்களின் பயணம் என்றுமே தனித்துவமானது எனவும் ரசிகர்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.