அண்ணா நகர் செழிப்பாக இல்லை: வாக்களித்த பிறகு விஷால் கருத்து
அண்ணாநகர் தொகுதி செழிப்பாக இல்லை என நடிகர் விஷால் கருத்து தெரிவித்துள்ளது குறித்து...
அண்ணாநகர் தொகுதி செழிப்பாக இல்லை என நடிகர் விஷால் கருத்து தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7 மணி முதல் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் என பலரும் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றி வருகின்றனர்.
அந்தவகையில் அண்ணாநகர் தொகுதியில் மிதிவண்டியில் வந்து நடிகர் விஷால் வாக்கு செலுத்தினார். பின்னர் செய்தியாளார்களுடன் விஷால் பேசியதாவது:
Advertisement
Advertisement
''அண்ணா நகர் தொகுதி செழிப்பாக இல்லை. மழை மற்றும் வெள்ளத்தில் நாங்கள் களமிறங்கி செயல்பட்டுள்ளோம். இந்த முறை ஆட்சி அமைப்பவர்கள் அதனை சரி செய்ய வேண்டும்'' என விஷால் குறிப்பிட்டார்.
summary