கதாநாயகனாகும் இயக்குநர் அருண் புருஷோத்தமன்!
இயக்குநர் அருண் புருஷோத்தமன் நடிகராக அறிமுகமாகிறார்...
இயக்குநர் அருண் புருஷோத்தமன் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அருவி, வாழ், சக்தித் திருமகன் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி ரசிகர்களிடம் பாராட்டுகளைப் பெற்றவர் இயக்குநர் அருண் புருஷோத்தமன். வணிக ரீதியாக மட்டுமல்லாது விமர்சன ரீதியாகவும் கவனிக்கப்படும் படங்களைக் கொடுத்தவர்.
பெண்கள் மீதான சமூக, பாலினப் பார்வை ஆகியவற்றைக் கொண்டு உருவான அருவி, வாழ் திரைப்படங்களில் பெண்களின் மனவோட்டங்களை சிறப்பாக எழுதியதற்காக பாராட்டுகளையும் பெற்றார். சக்தித் திருமகன் திரைப்படம் ஊழல், லஞ்சத்திற்கு எதிரான கதையாக எடுக்கப்பட்டிருந்தது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், அருண் புருஷோத்தமன் நடிகர் சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிறுவனம் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தைத் தொடர்ந்து முன்னணி நடிகரை வைத்து படம் இயக்கும் பணிகளையும் அருண் கவனித்து வருவதாகக் கூறப்படுகிறது.
Reports indicate that director Arun Purushothaman is set to make his debut as a lead actor.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.