நிஜ வாழ்கையில் அடுத்தகட்டத்துக்குச் செல்லும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மீனா, ராஜி!
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் நடிகை ஹேமா போட்டியாளராகப் பங்கேற்கவுள்ளது குறித்து...
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மீனா என்ற பாத்திரத்தில் நடித்துவரும் நடிகை ஹேமா பங்கேற்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ராஜி பாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்த்த நடிகை ஷாலினி, திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.
இதன்மூலம் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்த இருவர் தங்கள் நடிப்புத் துறையில் அடுத்தகட்டத்துக்குச் செல்லவுள்ளதாக ரசிகர்கள் பலர் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
Advertisement
Advertisement
விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8 மணிக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் முதல் பாகத்துக்கு கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து இரண்டாவது பாகம் ஒளிபரப்பாகி வருகிறது.
முதல் பாகம் அண்ணன் தம்பி பாசத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டது. தற்போது இரண்டாவது பாகம் அப்பா, மகன்களின் பிணைப்பை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வருகிறது.
மகன்களுக்கு திருமணம் செய்து வைத்து, மருமகள்கள் வந்த பிறகு குடும்பத்தில் நடக்கும் சம்பவங்களை வைத்து தற்போது கதை நகர்கிறது. இத்தொடரில் மூத்த மருமகளாக மீனா பாத்திரத்தில் ஹேமாவும், இளைய மருமகளாக ராஜி பாத்திரத்தில் நடிகை ஷாலினியும் நடித்து வருகின்றனர்.
இதனிடையே பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் நடிகை ஹேமா பங்கேற்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சின்ன திரை பிரபலங்கள் பிக் பாஸில் பங்கேற்பது வழக்கமாக இருந்து வரும் நிலையில், இம்முறை ஹேமா செல்லவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதேபோன்று நடிகை ஷாலினியும் கவின் நடிக்கவுள்ள புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்துவந்த இரு நடிகைகள் அடுத்தகட்டத்துக்குச் செல்லவுள்ளதாக ரசிகர்கள் பலர் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
actress Hema participate as a contestant in Bigg Boss Season 10 vijay tv shalini act with kavin
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.