படத்தில் ஹீரோவாக நடிக்கும் கானா வினோத்! நாயகி யார் தெரியுமா?
பாடகர் கானா வினோத் திரைப்படத்தில் நாயகனாக நடிக்கவுள்ளது குறித்து...
பிக் பாஸ் புகழ் கானா வினோத் திரைப்படத்தில் நாயகனாக நடிக்கவுள்ளார். புதிய படத்தில் நாயகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும், இத்துடன் சில திரைப்படங்களில் பணிபுரிய ஒப்பந்தமாகியுள்ளதாகக் கூறியுள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் மக்கள் மனங்களைக் கவர்ந்தவர் கானா வினோத்.
இதற்கு முன்பே சில திரைப்படங்களில் பாடல்களைப் பாடியிருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு மக்கள் வெகுவாக இவரை அங்கீகரித்து வருகின்றனர்.
Advertisement
Advertisement
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிக் பாஸ் குரல், விஜய் சேதுபதி உள்பட பலரால் பாராட்டப்பட்டவர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு போட்டியில் இருந்து பாதியில் வெளியேறினார்.
பிக் பாஸின் கொண்டாட்ட நிகழ்ச்சியில் பாடல்களை எழுதி பணிபுரிந்து வந்த இவர், தற்போது பிக் பாஸ் முடிந்து திரைப்படங்களில் பணிபுரியத் தொடங்கியுள்ளார்.
தற்போது அடுத்தடுத்து படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார். ஜிவி பிரகாஷ் குமார் நாயகனாக நடிக்கும் படத்தில் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க பாடல்களை எழுதுகிறார்.
இதுமட்டுமின்றி கவின் - சாண்டி மாஸ்டர் இணைந்து நடிக்கும் புதிய படத்தில் பணிபுரியவும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
மேலும், புதிய படத்தில் நாயகனாக நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும், இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாகவும் கானா வினோத் தெரிவித்துள்ளார்.
கடவுள் ஆசிர்வாதத்தாலும் மக்கள் ஆதரவாலும் அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைத்து வருவதாகவும், இதனைத் தக்கவைத்துக்கொள்ள முழுமையாக உழைப்பேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே நாயகனாக நடிக்கும் படத்தில் யாரை நாயகியாக நடிக்கவைத்தால் நன்றாக இருக்கும் என கேட்ட கேள்விக்கு, திவ்யா கணேசன் என பதிலளித்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
பிக் பாஸ் வீட்டில் கானா வினோத் - திவ்யா கணேசன் இடையிலான நட்பு வெகுவாகப் பாராட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Bigg boss 9 tamil fame Singer gana vinoth act as hero in a new movie he suggest divya ganesan as heroin
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.