சிவகார்த்திகேயன் பாடியுள்ள தாய் கிழவி பட முதல் பாடல்!
தாய் கிழவி திரைப்படத்தின் முதல் பாடலின் வெளியீடு குறித்து...
நடிகை ராதிகா சரத்குமார் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள “தாய் கிழவி” திரைப்படத்தின் முதல் பாடலை நடிகர் சிவகார்த்திகேயன் பாடியுள்ளார்.
அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில் நடிகை ராதிகா சரத்குமார் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள புதிய திரைப்படம் “தாய் கிழவி”.
இந்தப் படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் பேஸன் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படத்தின் டீசர் கடந்த சில நாள்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்ப்பைப் பெற்றது.
Advertisement
Advertisement
இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா இசையில், நடிகர் சிவகார்த்திகேயன் பாடியுள்ள “தாய் கிழவி” படத்தின் “தாய் கிழவி வரா” எனும் முதல் பாடல், நாளை (பிப். 5) மாலை 5 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர்கள் முனிஷ்காந்த், பாலசரவணன், சிங்கம்புலி, அருள்தாஸ், இளவரசு, ஜார்ஜ் மரியன், முத்துக்குமார், ரெயிச்சல் ரிபேக்கா ஆகியோர் நடித்துள்ள தாய் கிழவி படம் வரும் பிப். 20 அன்று வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
Actor Sivakarthikeyan has sung the first song from the film "Thai Kizhavi," which features actress Radhika Sarathkumar in the lead role.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.