வெற்றிமாறன் இயக்கும் அரசன் திரைப்படத்தில் இருந்து தான் விலகுவதாகக் கூறும் கருத்துக்கு நடிகர் விஜய் சேதுபதி மறுப்பு தெரிவித்துள்ளார்.
நடிகர் சிம்புவை நாயகனாக வைத்து அரசன் திரைப்படம் உருவாகி வருகிறது.
வடசென்னை திரைப்படத்தின் கதையுடன் தொடர்புடைய படமாக அரசன் உருவாகிறது.
படப்பிடிப்பும் சென்னையில் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மதுரையில் முதல்கட்ட படப்பிடிப்பை நடத்த வெற்றி மாறன் திட்டமிட்டார்.
தற்போது, இரண்டாம் கட்டமாக படப்பிடிப்பு சென்னையில் விரைவில் நடைபெறவிருக்கிறது.
இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற விஜய் சேதுபதியிடம் அரசன் படத்திலிருந்து விலகலா எனக் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்குப் பதிலளித்த விஜய் சேதுபதி, “அப்படி எல்லாம் இல்லை. எனக்கே தெரியாது இப்படியான செய்திகள். வதந்திகள் மிக வேகமாக பரவுகின்றன. இதையெல்லாம் நம்பாதீர்கள்” என்றார்.
சென்னையில் நடைபெற இருக்கும் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் சிம்பு - விஜய் சேதுபதி தொடர்பான காட்சிகள் படமாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தயாரிப்பாளர் தாணு தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தில் ஆண்ட்ரியா, சைத்ரா ஆச்சர் நடிக்கிறார்கள்.
வட சென்னையின் உலகில் உருவாகும் இந்தப் படத்துக்கு மிகுந்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.