துரந்தர் படக்குழுவுக்கு சூர்யா - ஜோதிகா வாழ்த்து!
துரந்தர் படக்குழுவினருக்கு நடிகர்கள் சூர்யா - ஜோதிகா வாழ்த்து
துரந்தர் படக்குழுவினருக்கு நடிகர்கள் சூர்யா - ஜோதிகா வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
துரந்தர் படத்தைப் பாராட்டி, நடிகர் சூர்யா தனது எக்ஸ் பக்கத்தில் "இந்த தலைசிறந்த படைப்பை வழங்கியதற்காக ஆதித்யா தருக்கு நன்றி. துரந்தர் என்னவொரு அருமையான படம்.
அனைவரையும் வியக்க வைத்த உங்கள் படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகளும் மரியாதையும். அக்ஷய் கன்னா, ரன்வீர் சிங், சகோதரர் மாதவனுக்கு தனிப்பட்ட சிறப்பான வாழ்த்துகள்.
Advertisement
Advertisement
பிளாக்பஸ்டருக்கு மிகவும் தகுதியான படத்துக்கு வாழ்த்துகள்" என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இயக்குநர் ஆதித்யா தர் இயக்கத்தில் நடிகர்கள் ரன்வீர் சிங், அக்ஷய் கன்னா, மாதவன், சஞ்சய் தத் நடிப்பில் உருவான திரைப்படம் துரந்தர்.
பாகிஸ்தானில் உளவுப்பணி பார்க்கும் இந்திய ராணுவ வீரரின் கதையாக உருவான இப்படம், பல உண்மைச் சம்பவங்களையும் கதாபாத்திரங்களையும் மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.
Actor Suriya praises Dhurandhar, calls it deserving blockbuster
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.