துரந்தர் படக்குழுவினருக்கு நடிகர்கள் சூர்யா - ஜோதிகா வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
துரந்தர் படத்தைப் பாராட்டி, நடிகர் சூர்யா தனது எக்ஸ் பக்கத்தில் "இந்த தலைசிறந்த படைப்பை வழங்கியதற்காக ஆதித்யா தருக்கு நன்றி. துரந்தர் என்னவொரு அருமையான படம்.
அனைவரையும் வியக்க வைத்த உங்கள் படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகளும் மரியாதையும். அக்ஷய் கன்னா, ரன்வீர் சிங், சகோதரர் மாதவனுக்கு தனிப்பட்ட சிறப்பான வாழ்த்துகள்.
பிளாக்பஸ்டருக்கு மிகவும் தகுதியான படத்துக்கு வாழ்த்துகள்" என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இயக்குநர் ஆதித்யா தர் இயக்கத்தில் நடிகர்கள் ரன்வீர் சிங், அக்ஷய் கன்னா, மாதவன், சஞ்சய் தத் நடிப்பில் உருவான திரைப்படம் துரந்தர்.
பாகிஸ்தானில் உளவுப்பணி பார்க்கும் இந்திய ராணுவ வீரரின் கதையாக உருவான இப்படம், பல உண்மைச் சம்பவங்களையும் கதாபாத்திரங்களையும் மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.