பிக் பாஸ்: 220 முன்னோட்ட விடியோக்களில் விஜே பார்வதி முகம்!
பிக் பாஸ் 9 நிகழ்ச்சியில் 220 ப்ரோமோக்களில் விஜே பார்வதி முகம்.
பிக் பாஸ் 9 நிகழ்ச்சியில் வெளியான 320 முன்னோட்ட விடியோக்களில்(Promo), 220 முன்னோட்ட விடியோக்களில் விஜே பார்வதியின் முகம் காண்பிக்கப்பட்டு இருப்பதாக அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த நிகழ்ச்சியின் 13வது வார இறுதிநாள் நிகழ்ச்சியில் விஜே பார்வதி மற்றும் கமரூதினுக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டு, வெளியே அனுப்பப்பட்டனர்.
நேரடியாக இறுதி வாரத்துக்கு செல்வதற்கான (Ticket To Final) போட்டியில், சக போட்டியாளர் சான்ட்ராவை பார்வதி மற்றும் கமரூதின் இணைந்து காரில் இருந்து கீழே தள்ளிவிட்டது, மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
Advertisement
Advertisement
மேலும் வரம்பைமீறி பேசிக்கொண்டதால் பிக் பாஸ் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதனால் சான்ட்ராவை தள்ளிவிட்ட பார்வதி மற்றும் கமரூதினுக்கு ரெட் கார்டு வழங்க வேண்டும் என்று சமூக ஊடங்களில் ரசிகர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து, பார்வதி மற்றும் கமரூதின் ஆகிய இருவருக்கு தொகுப்பாளர் விஜய் சேதுபதி ரெட் கார்டு வழங்கி, போட்டியைவிட்டு வெளியே அனுப்பினார்.
இதனிடையே, விஜே பார்வதிக்கு ரெட் கார்டு வழங்கப்பட்டதற்கு ஆதரவாகவும் எதிராகவும் சமூக ஊடகங்களில் ரசிகர்கள் தங்களது கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், விஜே பார்வதி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பதிவில், ”பிக் பாஸ் 9 நிகழ்ச்சியில் வெளியான 320 முன்னோட்ட விடியோக்களில்(Promo), 220 முன்னோட்ட விடியோக்களில் நான் இருந்துள்ளேன், என்னுடைய முகம் காண்பிக்கப்படாத முன்னோட்ட விடியோக்களே இல்லை.
பிக் பாஸ் 9 நிகழ்ச்சி முழுவதும் நேர்மறையாகவோ, எதிர்மறையாகவோ நான் ஆதிக்கம் செலுத்தியுள்ளேன்” என்று பதிவிட்டுள்ளார்.
She has posted on her Instagram page that she has been featured in 220 out of the 320 promotional videos released for the Bigg Boss 9 show.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.