நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை பாடலை தமிழ், தெலுங்கில் பாடிய ஸ்ரீ கௌரி ப்ரியா!
நடிகை ஸ்ரீ கௌரி ப்ரியா தமிழ், தெலுங்கு மொழிகளில் பாடல் பாடியது குறித்து...
நடிகை ஸ்ரீ கௌரி ப்ரியா வாரணம் ஆயிரம் படத்திலிருந்து ’நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை’ என்ற பாடலை தமிழ், தெலுங்கு மொழிகளில் பாடி அசத்தினார்.
தமிழில் மாடர்ன் லவ் ஸ்டோரி இணையத் தொடரில் அறிமுகமான நடிகை கௌரி ப்ரியா, லவ்வர் திரைப்படத்தின் மூலம் மிகவும் புகழ்பெற்றார். தற்போது, தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.
மாஸ் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ரவி வர்மா நம்பூரி இயக்கத்தில் சென்னை லவ் ஸ்டோரி என்ற படத்தில் ஸ்ரீ கௌரி ப்ரியா நாயகியாக நடித்துள்ளார். இந்தப் படத்தில் நாயகனாக கிரண் அப்பாவரம் நடித்துள்ளார்.
Advertisement
Advertisement
இந்தப் படம் வரும் ஜூலை 24ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தின் முன்வெளியீட்டு நிகழ்ச்சி ஒன்றில் வாரணம் ஆயிரம் படத்திலிருந்து ’நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை’ என்ற பாடலை தமிழ், தெலுங்கு மொழிகளில் பாடி அசத்தினார்.
நடிகையாக இருக்கும் கௌரி ப்ரியா பாடலிலும் அசத்துவது ரசிகர்களிடம் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த விடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
இந்த விடியோவை ஸ்ரீ கௌரி ப்ரியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், “கொஞ்சம் தெலுங்கு, கொஞ்சம் தமிழ்... ஆனால், முழுமையான அன்புடன். எனக்கு மிகவும் பிடித்த இந்தப் பாடலை இப்படி பாடியதில் மகிழ்ச்சி. சென்னை லவ் ஸ்டோரி ஜூலை 24?” எனக் கூறியுள்ளார்.
Sri Gouri Priya sang the song "Nenjukkul Peithidum Maamazhai" in both Tamil and Telugu!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.