யார் பெத்த புள்ளையோ... வைரலாகும் எஸ்டிஆர் விடியோ!
நடிகர் சிலம்பரசனின் விடியோ வைரல்...
நடிகர் சிலம்பரசன் பகிர்ந்த விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
நடிகர் சிலம்பரசன் அரசன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இயக்குநர் வெற்றி மாறன் இயக்கத்தில் வடசென்னையை மையமாக வைத்து உருவாகும் படமென்பாதல் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இப்படத்திற்கு உருவாகியுள்ளது.
இதன் படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தாலும் இடையே சில நாள்கள் இடைவெளிவிட்டே நடைபெறுகிறது. காரணம், நடிகர் கென்னை வைத்து ராஜன் வகையறா திரைப்படத்தையும் வெற்றிமாறன் இயக்கி வருகிறார்.
Advertisement
Advertisement
அரசனைத் தொடர்ந்து, இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், படப்பிடிப்பு ஓய்வு நாள்களைக் கழிக்க சிலம்பரசன் வெளிநாடு சென்றுள்ளார். அங்கு கடற்கரை அருகே விளையாடிக்கொண்டிருந்த சிறுவன், சிலம்பரசனிடம் கற்களைக் கொடுத்ததும் அதனை வாங்கிக்கொண்ட எஸ்டிஆர், “இதை வைத்து நான் என்ன பண்றது? யார் பெத்த புள்ளையோ...” எனக் கூறிய விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. A video shared by actor Silambarasan has gone viral on social media.