மார்ஷல் அப்டேட்!
கார்த்தி - தமிழ் திரைப்படத்தின் படப்பிடிப்பு குறித்து...
நடிகர் கார்த்தியின் மார்ஷல் திரைப்பட படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
டாணாக்காரன் இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உருவாகும் மார்ஷல் என்கிற திரைப்படத்தில் நடிகர் கார்த்தி இணைந்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு, ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள கீழக்கரையில் சில மாதங்களுக்கு முன் துவங்கியது.
இதற்கான, கார்த்தியின் தோற்றம் மற்றும் படப்பிடிப்பு விடியோக்கள் இணையத்தில் கசிந்து வைரலாகின. 1960 காலகட்டங்களில் நடந்த கேங்ஸ்டர் கதையாக இப்படம் உருவாகி வருவதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், இப்படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் நிறைவடைந்ததாகவும் இந்தாண்டு தீபாவளி வெளியீடாக இப்படம் திரைக்கு வருமென இயக்குநர் தமிழ் தெரிவித்துள்ளார்.
தமிழ் எழுதிய சிறை திரைப்படம் நல்ல விமர்சனங்களைப் பெற்று ரூ. 40 கோடி வரை வசூலித்து வெற்றிப்படமானது குறிப்பிடத்தக்கது.