தெலுங்கு இயக்குநர் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன்?
பிரதீப் ரங்கநாதனின் புதிய திரைப்படம் குறித்து...
நடிகர் பிரதீப் ரங்கநாதன் தெலுங்கு இயக்குநர் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதீப் ரங்கநாதனின் ‘லவ் டுடே’, ‘டிராகன்’ மற்றும் ‘டியூட்’ ஆகிய திரைப்படங்கள் தொடர்ந்து ரு.100 கோடிக்கும் மேல் வசூலித்து வெற்றி பெற்றுள்ளன. இவர் நடித்த எல்ஐகே திரைப்படம் ஏப். 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
அடுத்ததாக, ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் புதிய திரைப்படத்தை இயக்குவதுடன் அதில் நாயகனாகவும் பிரதீப் நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், பிரதீப் தயாரிப்பு நிறுவனம் துவங்கவுள்ளதாகவும் இதன் முதல் திரைப்படத்தில் நடிகை மமிதா பைஜு முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், மைத்ரி மூவிஸ் நிறுவனத் தயாரிப்பில், ‘செக், சாகசம்’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய தெலுங்கு இயக்குநர் சந்திர சேகர் யெலட்டி இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழ், தெலுங்கில் இப்படம் உருவாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழில் உள்ளது போலவே பிரதீப் ரங்கநாதனுக்கு தெலுங்கிலும் ரசிகர்கள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.