FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
சிறப்புக் கட்டுரைகள்

உங்கள் பற்கள் வலுவாகவும் ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டுமா?

பற்கள் என்றாலே நமக்கு நினைவுக்கு வரும் முதுமொழி 'ஆலும்,வேலும் பல்லுக்கு உறுதி' என்பதுதான்.

Updated On : 6 ஆகஸ்ட் 2019, 3:14 pm IST
பகிர்:


தேரையர் அருளிய பற்பொடி...சித்த மருத்துவம்

பற்கள் என்றாலே நமக்கு நினைவுக்கு வரும் முதுமொழி 'ஆலும்,வேலும் பல்லுக்கு உறுதி' என்பதுதான். நமது முன்னோர்கள் பல் துலக்க இந்த இரண்டு மரத்தின் குச்சிகளைத்தான் பயன்படுத்தி வந்தனர் என்பதாகவே நாம் நம்பிக் கொண்டிருக்கிறோம். ஆனால் இந்தக் இரு குச்சிகளைத் தாண்டிய பற்பொடிகளையும் நம் முன்னோர்கள் பழக்கத்தில் வைத்திருந்தனர். அவற்றை பற்பொடி என்பதை விடவும் ஒரு மருந்துப் பொருளாக கருதி பயன்பாட்டில் வைத்திருந்தனர்.

சித்தர் பெருமக்கள் இத்தகைய பல்வேறு அரிய பற்பொடிகளைப் பற்றியும் அவற்றின் மருத்துவ குணங்களைப் பற்றியும் விரிவாகவே அருளியிருக்கின்றனர். இத்தகைய பற்பொடிகளை தொடர்ந்து பயன் படுத்தினால் நமது பற்கள் வலிவும், பொலிவும் பெற்று ஆரோக்கியமாக இருக்கும். அந்த வகையில் இன்றைய பதிவில் தேரையர் அருளிய பற்பொடி ஒன்றினைப் பற்றி பார்ப்போம். இந்த தகவல் 'தேரையர் வைத்திய காவியம்' என்னும் நூலில் இருந்து சேகரிக்கப்பட்டது.

Advertisement

Advertisement

"போகுந் தந்த வியாதிக் கொருமுறை
ஆகுஞ் சீன மரக்குடன் துத்தமும்
தாகுந் தான்றி தனிக் கடுக்காயுடன்
வாகு மாசிக்காய் வாகாய் விராகனெடெ.
எடுத்து கும்ப மெழிலா யரைத்துமே
கடுத்து மண்டலங் கருதியே தேய்த்திட
அடுத்த தந்த மசையும் பல் லுக்குத்து
முடுத் தப்பாமல் முடுகியே யோடுமே."

சீன அரக்கு, மயில் துத்தம், கடுக்காய், மாசிக்காய் ஆகியவற்றை தலா ஒரு விராகன் எடை அளவு எடுத்து நன்கு சுத்தம் செய்து, சிறு சிறு துண்டுகளாக நறுக்கி அவற்றை நன்கு பொடியாக அரைத்து, சலித்து எடுத்து வைத்துக் கொள்ள பற்பொடி தயார். இந்த கலவையைக் கொண்டு ஒரு மண்டலம் அதாவது நாற்பத்தி எட்டு நாட்கள் தொடர்ந்து பல் துலக்கி வர பல் அசைவு, பல் வலி, முரசு சம்பந்தமான நோய்கள் எல்லாம் தீரும் என்கிறார். 

இந்த சரக்குகள் எல்லா நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கிறது. விலையும் மிக மலிவுதான். இயற்கையான இந்த பற்பொடியினை நாம் வீட்டிலேயே தயாரித்து பலன் பெற்றிடலாம்.

நன்றி - சித்தர்கள் ராச்சியம்

'ஆரோக்ய வாழ்வுக்கு இயற்கை மருத்துவம் அவசியம் என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தி ஆரோக்ய பாரதத்தை உருவாக்குவோம்'
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments