முகப்பு
செய்திகள் / கட்டுரைகள்

சிபிஎஸ்இ தளத்தின் குறைகளை சுட்டிக்காட்டிய +2 மாணவருக்கு ஐஐடி-கான்பூரில் வேலை!

சிபிஎஸ்இ இணையதள குறைகளை சுட்டிக்காட்டிய +2 மாணவருக்கு ஐஐடி-கான்பூரில் வேலை வழங்கப்பட்டுள்ளது

Updated On : 12 ஜூன் 2026, 11:22 am IST
சிபிஎஸ்இ
பகிர்:

பனிரெண்டாம் வகுப்பில் மதிப்பெண்கள் குறைந்ததால் மன உளைச்சல் ஏற்பட்ட மாணவர்களுக்கு இடையே, இந்த சிபிஎஸ்இ இணையதளத்தில் இருந்த குறைபாடுகளை சுட்டிக்காட்டியிருந்த நிசர்கா அதிகாரிக்கு ஐஐடி-கான்பூரில் வேலை வழங்கப்பட்டிருக்கிறது.

மிகவும் புத்திசாலியான பிளஸ் 2 மாணவர் நிசர்கா அதிகாரி, இந்த ஆண்டுதான் பள்ளிப்படிப்பை முடித்திருந்த போதிலும், ஐஐடி-கான்பூர் கல்வி நிலையத்தில ஓபன்-சோர்ஸ் இன்டெலிஜென்ஸ் (ஓஎஸ்ஐஎன்டி) மற்றும் சைபர் பாதுகாப்பு புத்தாக்க குழுவிலும் வேலை வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு சிபிஎஸ்இ நிர்வாகம், கணினி திரையில் விடைத்தாள் திருத்தும் முறையை அறிமுகப்படுத்தியிருந்தது. இது குறித்து முன்கூட்டியே பல தரவுகளை ஆராய்ந்து, சிபிஎஸ்இ இணையதளத்தில் இருந்த குறைகளை நிசர்கா அதிகாரி சுட்டிக்காட்டியிருந்தார்.

Advertisement

Advertisement

அதாவது, சிபிஎஸ்இ இணையதளத்தை மிக எளிதாக ஹேக் செய்யலாம், பல குறைபாடுகள் இருக்கின்றன, ஓடிபி வழங்குவதை எளிதாக ஹேக் செய்து தகவல்களை திருடலாம் என பல விஷயங்கள் குறித்து மின்னஞ்சல் வாயிலாக முறையிட்டிருந்தார்.

summary

+2 student who pointed out flaws in the CBSE website lands a job at IIT-Kanpur!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.