பொய்ப் பிரசாரத்தால் இடது முன்னணியை வீழ்த்த முடியாது! பினராயி விஜயன்
கண்ணூரில் வாக்களித்த பினராயி விஜயன் செய்தியாளர்களை சந்தித்தது பற்றி...
பொய்ப் பிரசாரத்தால் இடது ஜனநாயக முன்னணி கூட்டணியை வீழ்த்த முடியாது என்று கேரள முதல்வர் பினராயில் விஜயன் வியாழக்கிழமை தெரிவித்தார்.
கேரளம், புதுவை மற்றும் அஸ்ஸாம் மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இந்த தேர்தலில் கண்ணூர் மாவட்டம் தர்மடம் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாநில முதல்வர் பினராயி விஜயன் போட்டியிடுகிறார்.
Advertisement
இந்த நிலையில், கண்ணூரில் இன்று வாக்களித்த பினராயி விஜயன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
அவர் பேசியதாவது”
“பொய்ப் பிரசாரத்தால் இடது ஜனநாயக முன்னணி கூட்டணியை வீழ்த்த முடியாது. நாங்கள் எப்போதும் மக்களை நம்புகிறோம்; மக்களும் எங்களை நம்புகிறார்கள்.
கடந்த பத்து ஆண்டுகளாக நாங்கள் மக்களுடன் இணைந்து பயணித்து வருகிறோம். அந்தப் பயணம் தொடர வேண்டும். நாங்கள் மக்களுடன் இருக்கிறோம். மக்களும் எங்களுடன் இருக்கிறார்கள். மதவாதப் பிரச்சாரத்தால் எங்களை வீழ்த்த முடியாது” எனத் தெரிவித்தார்.