வாக்களித்தார் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்!
அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது வாக்கைப் பதிவு செய்தார்.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது வாக்கைப் பதிவு செய்தார்.
தமிழகத்தில் காலை ஏழு மணி முதல் வாக்குப்பதிவானது தொடர்ந்து நடைபெற்று வரக்கூடிய வேலையில், விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாக்குப்பதிவானது மதுரையில் தற்போது வரை 20% நிறைவு பெற்ற உள்ள நிலையில். வாக்காளர்கள் விறுவிறுப்பாக வாக்குச்சாவடிக்கு வருகை தந்து வருகின்றனர்.
இந்த நிலையில், மதுரை சொக்கிகுளம் காக்கைப் பாடினியார் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில், மதுரை மத்திய தொகுதி திமுக வேட்பாளரும் அமைச்சருமான பழனிவேல் தியாகராஜன் தனது வாக்கினை வரிசையில் நின்று மக்களோடு மக்களாக நின்று வாக்குச் செலுத்தினார்.
Advertisement
summary