முகப்பு
மேற்கு வங்கம்

மேற்கு வங்கத்தில் வெடிகுண்டு பயன்பாடு! என்ஐஏவுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்!

மேற்கு வங்கத்தில் வெடிகுண்டு பயன்பாட்டில் இல்லாமல் இருப்பதை உறுதி செய்ய என்ஐஏவுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியது குறித்து...

Updated On : 28 ஏப்ரல், 2026 at 7:50 PM
தேர்தல் ஆணையம் - கோப்புப் படம்
பகிர்:

மேற்கு வங்கத்தில் தேர்தல் நடைபெற உள்ள வேளையில், வெடிகுண்டுகள் பயன்படுத்தாமல் இருப்பதை உறுதி செய்யுமாறு தேசிய புலனாய்வு முகமையிடம் (என்ஐஏ) தேர்தல் ஆணையம் செவ்வாய்க்கிழமை (ஏப்.28) கேட்டுக்கொண்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 23 ஆம் தேதி முடிவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 29 ஆம் தேதி நடைபெற உள்ளது. மேலும், இதற்கான வாக்கு எண்ணிக்கை வரும் மே. 4 ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இதனால் மேற்கு வங்க தேர்தல் களம் மிகவும் பரபரப்பாகக் காணப்படுகிறது.

இந்த நிலையில், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவை சீர்குலைக்கவும் அரசியல் கட்சிகளின் தொண்டர்களைக் குறிவைக்கவும் சமூக விரோதிகள் வெடிகுண்டுகளைப் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். இதை உறுதி செய்யுமாறு தேசிய புலனாய்வு முகமைக்கு, தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

முன்னதாக, மேற்கு வங்கம், தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் பாங்கர் பகுதியில், திரிணமூல் காங்கிரஸ் தொண்டர் எனக் கூறப்படும் ஒருவரின் வீட்டிலிருந்து காவல்துறையினர் நாட்டு வெடிகுண்டுகளை ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 26) அன்று மீட்டனர்.

தேர்தல் நடைபெறும் மாநிலத்தில் வெடிகுண்டுகள் மீட்கப்பட்டதைத் தொடர்ந்தும், இதுமாதிரியான சம்பவங்கள் நிகழ்ந்ததாக வந்த தகவல்களைத் தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

summary

The Election Commission, on Tuesday (April 28), requested the National Investigation Agency (NIA) to ensure that bombs are not used on election day in West Bengal.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.