FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலைவாய்ப்பு

வேலை வேண்டுமா? டிப்ளமோ முடித்தவர்களை டெக்னிக்கல் உதவியாளர் வேலைக்கு அழைக்கிறது இந்திய இயற்பியல் ஆய்வகம்!

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் அஸ்ட்ரோபிசிக்ஸ் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Updated On : 29 டிசம்பர் 2021, 11:03 am IST
பகிர்:

இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் அஸ்ட்ரோபிசிக்ஸ் நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: 
பணியிடங்கள்: கர்நாடகாவில் பெங்களூரு, கவுரிபிடானுார், தமிழகத்தில் கொடைக்கானல், காவலுார், லடாக்கில் லே.
மொத்த காலியிடங்கள்: 13
பணி: ஜூனியர் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் (எலக்ட்ரானிக்ஸ்) - 04
பணி: ஜூனியர் ரிசர்ச் அசிஸ்டென்ட் (அப்சர்வேசன்) - 06
பணி: மெக்கானிக் - 01
பணி: இன்ஜினியர் டிரெய்னி - 01
பணி: ரிசர்ச் டிரெய்னி - 01 

தகுதி : பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ, இயற்பியல் துறையில் பி.எஸ்சி பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். 

வயதுவரம்பு: இன்ஜினியர் டிரெய்னி, ரிசர்ச் டிரெய்னி பணிக்கு 26க்குள்ளும், மற்ற பணிகளுக்கு 30க்குள் இருக்க வேண்டும். இட ஒதுக்கீடு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயதுவரம்பில்  சலுகைகள் வழங்கப்படும். 

தேர்வு செய்யப்படும் முறை : எழுத்துத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.iiap.res.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.01.2022

மேலும் விபரங்கள் அறிய www.iiap.res.in/job.htm/?q=job_postings என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments