உளவுத்துறையில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்... விண்ணப்பிப்பது எப்படி?
இந்திய உள்துறை அமைச்சகத்தின் உளவுத்துறையில் நிரப்பப்பட உள்ள உதவி மத்திய புலனாய்வு அதிகாரி, செக்யூரிட்டி அசிஸ்டென்ட் மற்றும் ஜூனியர் இன்டலிஜென்ஸ் அதிகாரி உள்ளிட்ட 766 குரூப் பி மற்றும் சி பணி
இந்திய உள்துறை அமைச்சகத்தின் உளவுத்துறையில் நிரப்பப்பட உள்ள உதவி மத்திய புலனாய்வு அதிகாரி, செக்யூரிட்டி அசிஸ்டென்ட் மற்றும் ஜூனியர் இன்டலிஜென்ஸ் அதிகாரி உள்ளிட்ட 766 குரூப் பி மற்றும் சி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 766
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: ACIO-I/ Exe - 70
பணி: ACIO-II/ Exe - 350
பணி: JIO-I/ Exe - 50
பணி: JIO-II/ Exe -100
பணி: SA/ Exe - 100
பணி: JIO-I/MT - 20
பணி: JIO-II/MT - 35
பணி: SA/MT - 20
பணி: JIO-II/Tech - 07
தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
Advertisement
Advertisement
பணி: Halwai-cum-Cook - 09
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு மேல் படித்து தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: மாதம் ரூ. 7 ஆவது ஊதியக்குழுவின் படி தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.21,700 - 1,51,100 வழங்கப்படும்.
இதற்கு விண்ணப்பிக்கலாம் | விண்ணப்பிப்பது எப்படி? - ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனத்தில் வேலை
விண்ணப்பிக்கும் முறை: அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Assistant Director/G-3, Intelligence Bureau, Ministry of Home Affairs, 35 SP Marg, Bapu Dham, New Delhi-110021
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி தேதி: 19.08.2022
மேலும் விவரங்கள் அறிய https://www.mha.gov.in/sites/default/files/VACANCYCIRCULARIB_04072022.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
இதற்கு விண்ணப்பிக்கலாம் | பிரமோஸ் ஏவுகணை ஆராய்ச்சி மையத்தில் வேலை: பொறியியல் பட்டதாரிகளுக்கு வாய்ப்பு!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.