துணை ராணுவப் படையில் உதவி காவல் ஆய்வாளர் பணி: 20-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!
துணை ராணுவப் படையில் (எஸ்எஸ்பி) காலியாகவுள்ள உதவி காவல் ஆய்வாளர் , மருந்தாளுநர், அறுவை சிகிச்சை அரங்கு டெக்னீசியன் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு குறித்து...
மத்திய அரசின்கீழ் செயல்படும் துணை ராணுவப் படையில் (எஸ்எஸ்பி) காலியாகவுள்ள உதவி காவல் ஆய்வாளர் , மருந்தாளுநர், அறுவை சிகிச்சை அரங்கு டெக்னீசியன் போன்ற பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 20 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Assistant Sub-Inspector
1. Radiographer
காலியிடங்கள் : 3
2. Pharmacist
காலியிடங்கள் : 2
3. Operation Theatre Technician
காலியிடம்: 1
4. Dental Technician
காலியிடம் -1
சம்பளம்: மாதம் ரூ.29,200 - ரூ.92,300
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் Medical Imaging Technology, Radiography,Pharmacy, Operation Theatre Technology, Dental Hygienist பிரிவில் டிப்ளமோ தேர்ச்சியுடன் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 20.4.2026 தேதியின்படி 18 முதல் 27-க்குள் இருக்க வேண்டும்.
உச்ச வயது வரம்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினர்களுக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகள் சலுகை வழங்கப்படும் .
தேர்வு செய்யப்படும் முறை: PET, PST, CBT தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்த்தல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ. 100. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தவும். எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர், முன்னாள் ராணுவத்தினர், பெண்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: https://ssb.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 20.4.2026
விண்ணப்பிப்போரின் கூடுதல் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.