தில்லி உயர்நீதிமன்றத்தில் வேலை வேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்!
தில்லி உயர்நீதிமன்றத்தில் நிரப்பப்பட உள்ள குரூப் 'பி' பணியிடங்களான 152 இளநிலை நீதித்துறை உதவியாளர், மீட்டமைப்பவர் பணியிடங்களுக்கான அறிவிப்பு குறித்து...
தில்லி உயர்நீதிமன்றத்தில் நிரப்பப்பட உள்ள குரூப் 'பி' பணியிடங்களான 152 இளநிலை நீதித்துறை உதவியாளர், மீட்டமைப்பவர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 23 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இது குறித்த விவரங்கள்:
பணி: Junior Judicial Assistant/ Restorer
Advertisement
காலியிடங்கள்: 152
சம்பளம்: மாதம் ரூ.35,400 - 1,12,400
வயதுவரம்பு: 1.1.2026 தேதியின்படி 18 முதல் 32 வயதிற்குள் இருக்க வேண்டும். அதாவது 2.1.1994-க்கு முன்பும் 1.1.2008-க்கு பின்னரும் பிறந்திருக்கக் கூடாது. அரசு விதிகளின்படி எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓபிசி, முன்னாள் ராணுவத்தினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறன் பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் வயதுவரம்பில் சலுகை வழங்கப்படும்.
தகுதி: 23.2.2026 தேதியின்படி, இளங்கலை பட்டம் பெற்றிருப்பதுடன் கணினியில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழி மூலம் நடத்தப்படும் முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் ஆங்கில தட்டச்சு தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு ரூ.1,300, இதர பிரிவினருக்கு ரூ.1,500. கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: https://delhihighcourt.nic.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 23.2.2026
விண்ணப்பிப்போரின் விரிவான விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.