முகப்பு
அரசுப் பணிகள்

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... தமிழக தபால் துறையில் 2,994 பணியிடங்கள்!

தமிழ்நாடு தபால் துறையில் காலியாக உள்ள 2,994 உதவி பிராஞ்ச் போஸ்ட் மாஸ்டர், உதவி பிராஞ்ச் போஸ்ட் மாஸ்டர்,கிராமின் தக் சேவக்(ஜிடிஎஸ்) பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Updated On : 5 ஆகஸ்ட் 2023, 3:02 pm IST
பகிர்:



மத்திய தகவல் தொலைதொடர்புத் துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இந்திய தபால் துறையின் தமிழ்நாடு தபால் துறையில் காலியாக உள்ள 2,994 உதவி பிராஞ்ச் போஸ்ட் மாஸ்டர், உதவி பிராஞ்ச் போஸ்ட் மாஸ்டர்,கிராமின் தக் சேவக்(ஜிடிஎஸ்) பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தேர்வு இன்றி மதிப்பெண் அடிப்படையில் பணியமர்த்தப்பட உள்ளனர். இதற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

பணி: Gramin Dak Sevak (GDS), BRANCH POSTMASTER (BPM)

Advertisement

Advertisement

பணி: Assistant Branch Postmaster (ABPM)/Dak Sevaks)

காலியிடங்கள்: 2,994

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும், கணினி குறித்த அறிவு பெற்றிருப்பவராகவும், சைக்கிள் ஓட்டத்தெரிந்தவராகவும் இருக்க வேண்டும். 

சம்பளம்: பிபிஎம் பணிக்கு மாதம் ரூ.12,000 - 29,380, ஏபிபிஎம் பணிக்கு மாதம் ரூ.10,000 - 24,470

வயதுவரம்பு: 23.8.2023 தேதியின்படி18 முதல் 40க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:  பத்தாம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் பட்டியல் தயார் செய்யப்பட்டு சான்றிதழ்கள் சரிபார்ப்பு செய்யப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத் தேர்வு இல்லை.

விண்ணப்பிக்கும் முறை: https://indiapostgdsonline.gov.in/ என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 23.8.2023

மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments