FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
பிற

உலக சிட்டுக்குருவி தினம் - புகைப்படங்கள்

ஒரு கைப் பிடி தானியமும் குடிக்க தண்ணீர் வைத்தால் சிட்டுக்குருவி மகிழ்ந்து உண்ணும். அதுவே சாலச் சிறந்தது. மார்ச் 20ஆம் தேதி உலக சிட்டுக்குருவி தினத்தையொட்டிஇந்த இனத்தை மீட்டெடுக்க உறுதி எடுப்போம்.  இந்நிலையில் மொபைல் கோபுரங்கள், மின்சார கேபிள்கள் மற்றும் கான்கிரீட் கட்டிடங்கள் காரணமாக சிட்டுக்குருவிகளின் வாழ்விடங்கள் தொடர்ந்து சுருங்கி வருவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

Updated On : 23 ஏப்ரல் 2023, 6:16 pm IST
உலக சிட்டுக்குருவி தினத்தை முன்னிட்டு பெங்களூருவில் ஒரு வீட்டின் மொட்டை மாடியில் அமர்ந்து கீச்... கீச்... கீச்... என ரீங்காரம் பாடும் சிட்டுக்குருவி.
பகிர்:
சிட்டுக்குருவி மனிதனின் வாழ்விடத்தை சார்ந்தே இருக்கும். மரத்திலும், வீடுகளில் மறைவான பகுதிகளிலும் நார், வைக்கோல் போன்ற பொருட்களை வைத்து கூடு கட்டி வாழும்.
சிட்டுக்குருவிகள் முட்டையிட்டு குஞ்சு பொரிக்கும் பறவையினத்தை சேர்ந்தது. இவை பழுப்பு, சாம்பல், மங்கலான வெள்ளை என்று பல நிறங்களில் காணப்படும்.
தர்மசாலாவில் தனது குஞ்சுக்கு உணவளிக்கும் சிட்டுக்குருவி.

Advertisement

Advertisement

கோடையின் உக்கிரம் அதிகரித்துக் கொண்டே செல்வதால் தாகத்தைத் தணிக்க குழாயிலிருந்து வரும் தண்ணீரைக் குடிக்கும் ஒரு சிட்டுக்குருவி.
தானியங்களை உண்ணும் சிட்டுக்குருவிகள்.
சிட்டுக்குருவிகள் வீட்டுக்குருவிகள், ஊர்க்குருவிகள், அடைக்கலம் குருவிகள் என அழைக்கப்படுகின்றன.
இவை வடகம், அரிசி உள்ளிட்ட உணவுப் பொருட்களை விரும்பி உண்ணும்.
சிட்டுக்குருவிக்காக நம்மால் பெரிதாக ஏதும் செய்ய முடியாவிட்டாலும், இந்தக் கோடை காலத்தில் வீட்டிற்கு வெளியிலோ அல்லது மாடியிலோ, சிறிது தண்ணீர் மற்றும் தானியங்கள் வைத்தால் போதும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments