பரமக்குடியில் பிறந்து சென்னையில் வளர்ந்து, திரையுலகில் வெற்றிக்கொடி நாட்டிய கமல். அவருடைய அரசியல் பயணம் மிகக் குறுகியது என்றாலும், திரையுலகப் பயணம் அசாத்தியமானது.
நடிகர் என்ற வகையில் நான்கு தேசிய விருதுகள், தயாரிப்பாளராக ஒரு தேசிய விருது, பத்துக்கும் மேற்பட்ட தமிழக அரசின் விருதுகள் ஆகியவற்றைப் பெற்றவர்.இந்திய அரசு வழங்கிய பத்ம ஸ்ரீ, பத்மபூஷண் பட்டங்களையும் பெற்றவர்.பல சர்ச்சைகளை கடந்து வந்த கலைஞன்.
Advertisement
Advertisement
தனது கருத்தை யாருக்காகவும் விட்டுக் கொடுக்காத, மாற்றிக் கொள்ளாத மேதை.கமலின் கனவு படமான, மருதநாயகம் இரண்டாம் எலிசபெத் ராணியால் துவக்கப்பட்டது.தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி படங்களிலும் தொடர்ந்து நடித்தார்.
1974ல் வெளிவந்த அவள் ஒரு தொடர்கதை, 1975ல் வெளிவந்த அபூர்வ ராகங்கள் ஆகியவை கமல்ஹாசனுக்கு தனித்த அடையாளத்தை அளித்தன.மலையாளத்தில் 35க்கும் மேற்பட்ட படங்களிலும் ஹிந்தியில் 15க்கும் மேற்பட்ட படங்களிலும் நடித்திருக்கிறார் கமல்.பாலச்சந்தரை அப்பா என்றும் பாரதிராஜாவை அண்ணன் என்றும் சொல்வார் கமல்.
ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான முயற்சிகளில் ஈடுபட்டு புதுமைகளைப் புகுத்தி வரும் கலைஞன்.