நம்முடைய கனவுகள் சேர்ந்த புதிய இந்தியாவை உருவாக்குவோம்: ஜனாதிபதி பிரணாப் புத்தாண்டு வாழ்த்து!
நம்முடைய கனவுகள் ஒருங்கிணைந்த ஓர் இந்தியாவை உருவாக்க நாம் அனைவரும் ஒன்றிணைவோம் என்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி விடுத்த புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
புதுதில்லி: நம்முடைய கனவுகள் ஒருங்கிணைந்த ஓர் இந்தியாவை உருவாக்க நாம் அனைவரும் ஒன்றிணைவோம் என்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி விடுத்த புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஆங்கில புத்தாண்டினை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளதாவது:
வரக்கூடிய புது வருடம் நமது புகழ்பெற்ற நாட்டிற்கு வளர்ச்சி மற்றும் வளத்தினை கொண்டு வரட்டும்.
நம்முடைய கனவுகள் ஒன்றனைந்த ஓர் இந்தியாவை உருவாக்க நாம் அனைவரும் ஒன்றிணைவோம்.
நாட்டை தூய்மையாகவும் மற்றும் சூழல் மாசு இல்லாத நாடாகவும் உருவாக்க மக்கள் உறுதிமொழி எடுத்து கொள்ள வேண்டும் என வாழ்த்து செய்தியில் அவர் தெரிவித்துள்ளார்.