மகாத்மா காந்தி, லால் பகதூர் சாஸ்திரி பிறந்தநாள் நினைவு விடியோ வெளியிட்ட பிரதமர் மோடி
தனது ட்விட்டர் பக்கத்தில் இருவரின் பெருமையையும் எடுத்துரைக்கும் விதமாக விடியோப் பதிவுகளை பிரதமர் மோடி புதன்கிழமை பதிவிட்டுள்ளார்.
மகாத்மா காந்தி மற்றும் லால் பகதூர் சாஸ்திரி ஆகியோரின் பிறந்த நாள் அக்டோபர் 2-ஆம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அவர்களது நினைவிடங்களில் பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.
இந்நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில் இருவரின் பெருமையையும் எடுத்துரைக்கும் விதமாக விடியோப் பதிவுகளை பிரதமர் மோடி புதன்கிழமை பதிவிட்டுள்ளார்.
தேசத்தின் மகாத்மா காந்தியியடிகளின் 150-வது பிறந்தநாளில் எனது வணக்கத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.
Advertisement
Advertisement
நமது அன்பிற்குரிய பாபுவுக்கு மரியாதைக்குரிய வணக்கம்! மகாத்மா காந்தியின் 150-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு மனிதகுலத்துக்கு அவர் ஆற்றிய பங்களிப்புக்கு நாம் அனைவரும் நன்றி தெரிவித்துக் கொள்வோம். அவரது கனவுகளை நனவாக்குவதற்கும் சிறந்த முயற்சியை உருவாக்குவதற்கும் தொடர்ந்து கடினமாக உழைக்க உறுதியேற்போம்.
'ஜெய் ஜவான் - ஜெய் கிஸான்' பிரகடனத்தை முன்வைத்த நமது முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை சமர்பிப்போம்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.